நடிகையின் லாட்ஜ்ஜில்.. காதல் ஜோடிக்கு நடுவே படுத்திருந்த 3வது "உருவம்".. யார்னு தெரியுமா? அலறிய பெண்
சென்னை: நடிகையின் ரிசார்ட்டில் ஒரு சபலபேர்வழி சிக்கி உள்ளார்.. இவரிடம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. நேற்றில் இருந்தே இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வரும்நிலையில், அந்த நபர் எப்படி சிக்கினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிரபல நடிகை: பிரபல நடிகை "காதல்" பட சந்தியாவுக்கு சொந்தமான ரிசார்ட், சென்னையை அடுத்துள்ள கல்பாக்கம் அருகே உள்ளது.. இவரது கணவர்தான் இந்த ரிசார்ட்டை நிர்வகித்து வருபவராம்.. கூவத்தூர் பக்கத்தில், பரமன்கேணி என்ற பகுதியில் இந்த பண்ணை வீடு அமைந்துள்ளது... இந்த ரிசார்ட்டில் காதல் ஜோடியும், நண்பர்கள் சிலரும் வந்து தங்கியிருக்கிறார்கள்.

சம்பவத்தன்று இரவு 2 மணிக்கு, காதலர்கள் அறைக்குள், சுபாஷ் என்ற நபர் உள்ளே நுழைந்துள்ளார்.. காதலன், காதலி படுக்கையில் படுத்திருக்கும்போது, அவர்களுக்கு நடுவில் சுபாஷ் படுத்துள்ளார்.. பெண்ணிடம் பாலியல் சீண்டலும் செய்துள்ளார்.. இதனால் கண்விழித்துக்கொண்ட பெண், லைட் போட்டு பார்த்துள்ளார்.. அப்போதுதான், இந்த நபர் சிக்கி உள்ளார்.. அலறி கூச்சலிடவும், அதே ரூமில் படுத்திருந்த காதலன், பக்கத்து ரூமில் தங்கியிருந்த மற்ற நண்பர்கள், சுபாஷை சுற்றி வளைத்து கைது செய்து, தர்மஅடி தந்தனர்.. போலீசிலும் ஒப்படைத்தனர்.
எப்படி சிக்கினார்: இந்த நபர் எப்படி சிக்கினார் என்பது குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.. நடிகையின் இந்த பண்ணை வீட்டுக்கு பக்கத்திலேயே பீச் உள்ளது.. அத்துடன் நீச்சல் குளத்துடன் கூடிய வசதி கொண்டுள்ளது. ஒருநாள் வாடகை என்பதுபோலதான் இந்த ரிசார்ட்டில் பணம் வசூலித்து வருகிறார்கள். ஒருவாரம்கூட தங்கி கொள்ளலாம்.. ஆனால், ஒருநாள் வாடகையில்தான் கணக்கு செய்யப்படும்..
இந்த ரிசார்ட்டை பற்றி கேள்விப்பட்டு ராமச்சந்திரன் என்ற இளைஞர் தன்னுடைய காதலியுடன் சென்றுள்ளார்.. இந்த பெண்ணைதான் ராமச்சந்திரன் விரைவில் கல்யாணமும் செய்து கொள்ள போகிறார்.. தன்னுடைய வருங்கால மனைவி என்பதால், இந்த ரிசார்ட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.. அவருடன் அவரது நண்பர்கள் 6 பேர் சென்றிருக்கிறார்கள்.. மொத்தம் 3 ரூம்களை புக் செய்துள்ளனர்..
காதல் ஜோடி: ஒரு அறையில், ராமச்சந்திரனும், வருங்கால மனைவியும் தங்கியிருக்கிறார்கள்.. மற்றவர்கள் 2 அறைகளில் தங்கியிருந்திருக்கிறார்கள்.. முதல்நாள் ரிசார்ட்டிலும், பீச்சிலும் அனைவரும் ஜாலியாக பொழுதை கழித்துள்ளனர்.. இரவு நேரம் அவரவர் ரூமுக்கு திரும்பியுள்ளனர்.. சாப்பிட்டு அனைவரும் தூங்கிவிட்டனர்.. அப்போதுதான், நள்ளிரவு 2 மணிக்கு யாரோ தன்னை சீண்டுவது போல, வித்தியாசமாக உணர்ந்துள்ளார் அந்த பெண்.. உடனே பக்கத்தில் படுத்திருந்த ராமச்சந்திரனை எழுப்பியுள்ளார்..
"இந்த ரூமில் நம்மை தவிர, வேறு யாரோ 3வது நபர் இருப்பது போல தெரிகிறது" என்று பதட்டத்துடன் கூறியிருக்கிறார்.. இதனால், ராமச்சந்திரன் எழுந்து சென்று, விளக்குகளை போட்டுள்ளார்.. ஆனால், அந்த ரூமில் யாருமே இல்லை.. "புதிய இடம் என்பதால், அப்படி தோன்றியிருக்கலாம் என்று சொல்லி, அந்த பெண்ணை சமாதானப்படுத்தி தூங்க வைத்திருக்கிறார்.. கொஞ்ச நேரத்தில், ராமச்சந்திரனும் தூங்கிவிட்டார்.. மறுபடியும் காதலி அலறினார்..
ராமச்சந்திரன் யார்: "இந்த ரூமில் நிச்சயம் ஒருவர் தங்கியிருக்கிறார்" என்று அழுதுகொண்டே சொன்னார்.. இதனால் ராமச்சந்திரன் மறுபடியும் லைட்டை போட்டு, யாராவது இருக்கிறார்களா என்று ரூம் முழுக்க தேடினார்.. அந்த ரூமுக்குள் பீரோ இருந்தது.. கட்டில், ஷோபா போடப்பட்டிருந்தது.. எங்குமே யாருமே தென்படவில்லை.. இறுதியாக, கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்தார் ராமச்சந்திரன்.. அப்போது, ஏதோ செல்போன் வெளிச்சம் போல அங்கு தென்பட்டது..
பிறகு, தன்னுடைய கையை கட்டிலுக்கு அடியில் விட்டு பார்த்தபோதுதான், சுபாஷ் சிக்கினார்.. கட்டிலை இழுத்து போட்டுவிட்டு, சுபாஷை வெளுத்து கட்டினார் ராமச்சந்திரன்... இந்த சத்தம் கேட்டு, ஓடிவந்து சுபாஷை அடித்து நொறுக்கி உள்ளார்கள்.. போலீசுக்கு தகவல் தரவும் அவர்கள் விரைந்து வந்து காயமடைந்த சுபாஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்..
ரிசார்ட் : விசாரணையையும் துவக்கினர்.. சுபாஷ் திருச்சினாங்குப்பத்தை சேர்ந்தவராம்.. இதுவரை அந்த ரிசார்ட்டில் ஏகப்பட்ட பெண்கள் வந்து தங்கி சென்றிருக்கிறார்களாம்.. பலர் குடும்பம், குழந்தைகளுடன் வந்து தங்கியிருக்கிறார்கள்.. இந்த பெண்கள் குளிக்கும்போது, அதைஎல்லாம் வீடியோவாக எடுத்து தன்னுடைய செல்போனில் வைத்திருக்கிறாராம் சுபாஷ்.. இதைதவிர நிறைய ஆபாச வீடியோக்களும் இருந்திருக்கின்றன..
இந்த ரிசார்ட்டை பொறுத்தவரை, அறையின் உட்பக்கம் தாழிட்டு கொண்டாலும், வெளியில் இருந்தும் கதவை திறக்க முடியுமாம்.. ஆனால், இந்த விஷயம் இங்கு வந்து தங்கும் நபர்கள் யாருக்கும் தெரியாது. அதாவது, உருண்டை வடிவிலான லாக் சிஸ்டம் இருக்கிறது.. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முறையை வைத்திருக்கிறார்களாம்..
சுபாஷ் கைது: கைதாகி உள்ள சுபாஷ், இங்குள்ள அறைகளை சுத்தம் செய்யும் ஊழியர் என்பதால், கதவை எளிதாக திறந்து அடிக்கடி வந்திருக்கிறார். சம்பவத்தன்றுகூட, இளம்பெண் படுக்கையில் இருந்ததை செல்போனில் வீடியோ எடுக்க முயன்றபோதுதான், வசமாக சிக்கிவிட்டார்.. நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, கல்பாக்கம் பகுதி மக்கள் திரண்டு வந்துவிட்டார்களாம்.. அதற்கு பிறகுதான் விஷயத்தை சொல்லி, அவர்களை கலைந்துசெல்ல வைத்துள்ளனர் போலீசார். விசாரணை இன்னமும் தொடர்ந்து சுபாஷிடம் நடந்து கொண்டிருக்கிறது.
உஷார்.. உஷார்: தற்போது கோடை விடுமுறை நடந்துவருவதால், இதுபோன்ற விடுதிகளிலும், பண்ணை வீடுகளிலும் பலர் தங்கி விடுமுறை நாட்களை செலவிட்டு வருகிறார்கள்.. எனினும், ரிசார்ட்கள், உட்பட தங்கும் விடுதிகளுக்கு வந்து செல்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.. குடும்பம் குடும்பமாக ரிசார்ட்களிலும், தீம் பார்க்குகளிலும் மக்கள் குவிந்து வருகின்றனர்... எனவே, எங்கே ரிலாக்ஸ் செய்ய போனாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், குறிப்பாக, ரூம்கள், குளியல் அறைகளில் ரகசிய கேமிராக்கள் உள்ளனவா? ரூம் கதவுகள் சரியாக லாக் செய்யப்பட்டுள்ளதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றன..
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications