சிஏஏ, என்ஆர்சிக்கு எதிர்ப்பு.. சென்னையில் கோலம் போட்ட பெண்களை கைது செய்த போலீஸ்.. பெரும் பரபரப்பு!
சென்னை: சென்னையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெசன்ட் நகர் பகுதியில் கோலம் போட்டு போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் கைது செய்தனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது. இன்னொரு பக்கம் நாடு முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் சில இடங்களில் மாணவர்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சட்ட திருத்தம் காரணமாக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான சண்டை வந்துள்ளது.

சென்னை எப்படி
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை 5 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 7 பேர் பெசன்ட் நகர் பகுதியில் வித்தியாசமான முறையில் போராட்டம் செய்தனர். சாலையில் கோலம் போட்டு அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் சில பெண்கள் கல்லூரி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலம் போட்டு போராட்டம்
அவர்கள் தங்கள் கோலத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக வாசகங்களை எழுதி இருந்தனர். அதன்படி நோ என்ஆர்சி, வேண்டாம் குடியுரிமை சட்ட திருத்தம், வேண்டாம் என்ஆர்சி போன்ற வசனங்களை எழுதி இருந்தனர். பாஜகவிற்கு எதிராகவும் சில வசனங்கள் இடம்பெற்று இருந்தது.

போலீசார் நிலை
இந்த நிலையில் போலீசார் கோலம் செய்து போராட்டம் நடத்திய பெண்களை கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த துணை கமிஷ்னர், பெண் போலீசார் போலீசார் மூலம் 7 பேரையும் கைது செய்தனர்.இதற்கு எதிராக பெண்களிடமும் குடும்ப உறுப்பினர்கள் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர்.

விடுதலை செய்யப்பட்டனர்
இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அனுமதி இன்றி போராட்டம் செய்தததாகவும், சாலையில் வண்ணம் வரைந்ததாகவும், அனுமதி இன்றி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையில் கூடியதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications