சிஏஏ, என்ஆர்சிக்கு எதிர்ப்பு.. சென்னையில் கோலம் போட்ட பெண்களை கைது செய்த போலீஸ்.. பெரும் பரபரப்பு!
சென்னை: சென்னையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெசன்ட் நகர் பகுதியில் கோலம் போட்டு போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் கைது செய்தனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது. இன்னொரு பக்கம் நாடு முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் சில இடங்களில் மாணவர்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சட்ட திருத்தம் காரணமாக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான சண்டை வந்துள்ளது.

சென்னை எப்படி
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை 5 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 7 பேர் பெசன்ட் நகர் பகுதியில் வித்தியாசமான முறையில் போராட்டம் செய்தனர். சாலையில் கோலம் போட்டு அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் சில பெண்கள் கல்லூரி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலம் போட்டு போராட்டம்
அவர்கள் தங்கள் கோலத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக வாசகங்களை எழுதி இருந்தனர். அதன்படி நோ என்ஆர்சி, வேண்டாம் குடியுரிமை சட்ட திருத்தம், வேண்டாம் என்ஆர்சி போன்ற வசனங்களை எழுதி இருந்தனர். பாஜகவிற்கு எதிராகவும் சில வசனங்கள் இடம்பெற்று இருந்தது.

போலீசார் நிலை
இந்த நிலையில் போலீசார் கோலம் செய்து போராட்டம் நடத்திய பெண்களை கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த துணை கமிஷ்னர், பெண் போலீசார் போலீசார் மூலம் 7 பேரையும் கைது செய்தனர்.இதற்கு எதிராக பெண்களிடமும் குடும்ப உறுப்பினர்கள் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர்.

விடுதலை செய்யப்பட்டனர்
இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அனுமதி இன்றி போராட்டம் செய்தததாகவும், சாலையில் வண்ணம் வரைந்ததாகவும், அனுமதி இன்றி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையில் கூடியதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications