சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம்.. மத்திய அரசு பணிக்கு போகும் திவ்யதர்ஷினி ஐஏஎஸ் யார்?
சென்னை: 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தன்னுடைய 24 ஆவது வயதில் வெற்றி பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தவர் தான் திவ்யதர்ஷினி ஐஏஎஸ். இவர் தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நிர்வாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இயக்குநராக பொறுப்பேற்க உள்ளார். திவ்யதர்ஷினி ஐஏஎஸ் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நிர்வாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் திவ்யதர்ஷினி ஐஏஏஸ் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டிருக்கிறார். மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 3 வாரங்களுக்குள் மத்திய அரசு பணியில் திவ்யதர்ஷினி சேர வேண்டும் என்று மத்திய அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

திவ்யதர்ஷினி ஐஏஎஸ் யார் : திவ்யதர்ஷினி ஐஏஎஸ் சென்னையில் பிறந்து வளர்ந்தார். இவருடைய தந்தை சண்முகம் ஒரு தனியார் ஆலோசகராகவும், தாய் பத்மாவதி இல்லத்தரசியாவார். திவ்யதர்ஷினி ஐஏஎஸ்க்கு ஒரு அக்கா மற்றும் தம்பி ஆகியோர் உள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். அதன்பிறகு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம்: 2010ம் ஆண்டு தனது இரண்டாவது முயற்சியில் திவ்யதர்ஷினி ஐஏஏஸ் சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தார். நாட்டிலேயே ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்ததால் தமிழக கேடரை கேட்டு வந்தார். தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக கடந்த 2011ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஐஏஎஸ் பணிக்கான பயிற்சிக்கு பின்னர், 2012-13 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் உதவி ஆட்சியராக பணியில் சேர்ந்தார்.
தர்மபுரி கலெக்டர்: பின்னர் 2013-15 ஆம் ஆண்டுக் காலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் சார் ஆட்சியராகப் பணிபுரிந்தார். பின்னர் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். பின்னர் தமிழ்நாட்டின் துணை உள்துறை செயலாளராகவும், பொதுப்பணித்துறை செயலாளராகவும் திவ்யதர்ஷினி ஐஏஏஸ் பணியாற்றினார். இதேபோல் புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.அதன்பின்னர் தருமபுரி மாவட்டத்தின் ஆட்சியராகவும் திவ்யதர்ஷினி ஐஏஎஸ் பணியாற்றினார்.

தன்னம்பிக்கை பேச்சாளர்: திவ்யதர்ஷினி ஐஏஎஸ் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்க வரும் மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்து உடனடியாக தொடர்புடைய துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தி அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றார். இதேபோல் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஊக்கம் அளித்து வருகிறார். மிகவும் எளிமையானவரான திவ்யதர்ஷினி ஐஏஎஸ் நேர்மையான அணுகுமுறை ஆகியவற்றால் மிக குறுகிய காலத்தில் மக்களிடம் நற்பெயர் பெற்றார்.

உதயநிதியின் துறை: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்ட நிலையில், அவருடை விளையாட்டுத்துறையின் அங்கமாக உள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குனராக திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மத்திய அரசு திவ்யதர்ஷினியை உடனடியாக மத்திய அரசு பணிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. திவ்யதர்ஷினியை மத்திய அரசுப் பணிக்கு மாற்றுவதாக தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தத்திற்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கடிதம் அனுப்பி உள்ளது.
மத்திய அரசு கடிதம்: அந்தக் கடிதத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குனராக உள்ள திவ்யதர்ஷினி, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் அந்தப் பதவியில் 5 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ பணியாற்றுவார். எனவே அவரை தமிழக அரசு பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். 3 வாரங்களுக்குள் மத்திய அரசு பணியில் திவ்யதர்ஷினி சேர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications