ஜெய்பீம்: எதிர்ப்பு தெரிவித்தது மாஜி டி.எஸ்.பி. ஜி கலியமூர்த்தி- ஓய்வுபெற்ற எஸ்பி கலியமூர்த்தி அல்ல
சென்னை: ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் "புரட்சிகர அரசு அமைக்க சதி- ஜெய்பீம்-க்கு எதிரான மாஜி போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி கருத்தால் சர்ச்சை" என செய்தி வெளியாகியிருந்தது.
இந்த செய்திக்கான படத்தில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. கலியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் செய்திக்கான படத்தில் ஓய்வு பெற்ற எஸ்.பி. கலியமூர்த்தியின் படம் தவறுதலாக இடம்பெற்றுவிட்டது.
இதனை ஓய்வு பெற்ற எஸ்.பி.கலியமூர்த்தி மின்னஞ்சல் மூலம் "ஜெய் பீம் என்ற சினிமா படம் சம்பந்தமாக DSP. G. KALIYAMOORTHY என்பவர் எழுதியதாக ஒரு கருத்து இணையத்தில் உலா வருகிறது, அதில் என்னுடைய புகைப்படத்தை இணைத்து இணையத்தில் பகிர்வதாக இதழியல் துறை நண்பர்கள் எனக்குத் தகவல் தெரிவித்ததன் பேரில் விளக்கம் அளிக்கவே இந்தப் பதிவு. இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் முன்னாள் SP A . KALIYAMURTHY இணையத்தில் பல லட்சம் பேர் என்னை தொடர்கிறார்கள் அவர்கள் இந்தப்பதிவு என்னுடையது என்று தவறாக நினைத்து விடக்கூடாது என கூறியிருந்தார். இதனையடுத்து குறிப்பிட்ட செய்திக்கான படங்களில் தவறுதலாக இடம்பெற்றிருந்த ஓய்வு பெற்ற எஸ்.பி. கலியமூர்த்தியின் படங்களை நீக்கப்பட்டது.
விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு
Recommended Video
ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. கலியமூர்த்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்கங்கள் கூட்டமைப்பின் இணை பொது செயலாளர் G.கலியமூர்த்தி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.