அரூர் சாலை விபத்து... பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு... முதல்வர் உத்தரவு
சென்னை: அரூர் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண தொகையை அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்திலுள்ள அரூரில் அமைந்துள்ள சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சாலையோரம் இருந்த பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த கார் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவம் இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் பலத்த காயமடைந்தர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண தொகையை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விபத்திற்குப் பின் தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் மாட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்ச ரூபாயும் பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக வாகன ஒட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications