சூப்பர் அறிவிப்பு.. ஸ்டாலினுக்கு செம டஃப்தான்.. சத்தமில்லாமல் "சாதி"க்கும் எடப்பாடியார்!
தேவேந்திர குல வேளாளர் ஓட்டுக்களை அள்ளி போகும் எடப்பாடியார்
சென்னை: பிரச்சாரங்களில் ஸ்டாலின் ஒரு ரூட்டில் பட்டைய கிளப்புகிறார் என்றால், எடப்பாடியார் வேறு ரூட்டில் சென்று அதிரடி அறிவிப்புகளை தெறிக்க விடுகிறார்..!
பொதுவாக அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு சாதி சான்றிதழ்கள் தேவைப்படுகிறது.. அதேபோல, பட்டியலின மக்கள் தங்களின் சலுகைகளை முழுசுமாக பெறுவதற்கும் சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது.
அந்த வகையில் பள்ளர் சமுதாய மக்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.. பட்டியலினத்துக்குள்தான் பள்ளர் சமுதாயமும் வருகிறது.. அதனால், பள்ளர் சமுதாய மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு வந்தனர். அதேபோல, குடும்பர், பள்ளர், மூப்பர், போன்ற உட்பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என்ற பொது பெயரில் மாற்றும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில்தான், 7 உட்பிரிவுகளை கொண்ட சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என்ற பொது பெயரில் அழைப்பதற்கான அரசாணை இன்னும் 30 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. இந்த அறிவிப்பு அந்த சமுதாய மக்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
அதேபோல இந்த அறிவிப்பின்மூலம், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஆதரவையும், ஓட்டுக்களையும் சிந்தாமல் சிதறாமல் அள்ளிவிடலாம் என்பதே எடப்பாடியாரின் கணக்காக உள்ளது..
அதனால்தான், தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயர் கேட்கும் உட்பிரிவு மக்களுக்கு, சாதி சான்றிதழ் தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரிலேயே கூடிய சீக்கிரத்தில் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தரப்பட்டுள்ளதாம்!