புயல் பாதித்த திருவாரூர், நாகைக்கு செல்கிறார் முதல்வர்.. இந்த முறை ரயிலில்!
Recommended Video

சென்னை: கஜா புயல் பாதித்த திருவாரூர், நாகை மாவட்டங்களை ஆய்வு செய்ய நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செல்கிறார்.
கடந்த 16 ம் தேதி வீசிய கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். குடிசை வீடுகளில் வசித்து வந்தவர்கள், தங்குவதற்கு வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். இன்னும் மின்சாரம், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 20 ம் தேதி சென்னையில் இருந்து, விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் ஆய்வு செய்தார். இதனையடுத்து, தஞ்சை, நாகை செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக முதலமைச்சர் பழனிசாமி சென்னை திரும்பினார். ஹெலிகாப்டரில் முதலமைச்சர் ஆய்வு பணிகளை மேற்கொண்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்தநிலையில், புயல் பாதித்த 13 நாட்களுக்கு பிறகு நாளை மறுநாள் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக, நாளை இரவு சென்னையிலிருந்து ரயில் மூலம் நாகைக்கு செல்கிறார்.
இந்த பின்னணியில், 7 பேர் கொண்ட மத்தியக் குழு ஆய்வு பணி இன்றுடன் நிறைவு செய்து கொண்டு, இந்த வார இறுதிக்குள் மத்திய அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications