ஒரு குட் நியூஸ்.. ஒரு பேட் நியூஸ்.. தவெக அரசில் உருவான புது பவர் சென்டர்! விஜய்க்கு இது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (TVK) அரசு, பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறது. மபுதிய அமைச்சரவை உறுப்பினர்கள் விரைவாகப் பொறுப்புகளைக் கையாண்டு, துறைசார் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தியுள்ளனர். இவர்களின் சுறுசுறுப்பும் நிர்வாகத் திறனும் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மிகத் தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார். "நிர்வாகத்தின் எந்தவொரு மட்டத்திலும் ஊழல் சகிக்கப்படாது. அது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். இந்தக் கடுமையான நிலைப்பாடு, மூத்த IAS அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலகம் முதல் மாவட்ட நிர்வாகம் வரை ஒரு சாதகமான மாற்றத்தின் காற்று வீசுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதிய ஆட்சியின் வெளிப்படைத்தன்மை மற்றும் வேகம், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

TVK Joseph Vijay CM TVK Government Tamil Nadu Anti Corruption Drive Parallel Power Centres Good Governance Tamil Nadu Vijay TVK

ஆனால், இந்த பெயருக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சில கவலைக்குரிய சம்பவங்கள் அரசியல் விமர்சகர்களை உறுத்தத் தொடங்கியுள்ளன. கட்சித் தலைவராகவும் முதலமைச்சராகவும் இருக்கும் ஜோசப் விஜய், மாவட்ட அளவில் உருவாகி வரும் 'இணையான அதிகார மையங்கள்' (Parallel Power Centres) எனப்படும் பிரச்னையைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் சில நிர்வாகிகள் அரசு அதிகாரிகளின் பணிகளில் தலையிடுவது, அத்துமீறல்களில் ஈடுபடுவது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.

உதாரணமாக, தென்காசி மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் தவெக நிர்வாகிகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அம்மா உணவகங்களுக்குச் சென்று 'ஆய்வு' என்ற பெயரில் அதிகாரிகளுக்கு உத்தரவிடும் சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. வேலூர் பகுதியில் செங்கல் சூளை அதிபர்களிடம் மாதாந்திர மாமூல் கோரிய ஒரு ஒன்றியச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சேலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை கட்சி விழாவுக்கு அழைத்துச் சென்ற விவகாரத்தில் கல்வித்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

இத்தகைய சம்பவங்கள் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த அத்துமீறல்களுக்கு முக்கியக் காரணம், கட்சியில் இன்னும் வலுவான, தெளிவான ஒழுங்குமுறை கட்டமைப்பு (Party Structure) இல்லாததுதான். ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியான மாவட்டச் செயலாளர்களை நியமித்து, தொண்டர்களை கண்காணிக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

தவறு செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தையும் வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் சுதந்திரமாகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். தங்களை மாற்று அதிகார மையமாகக் கருதி செயல்பட்டால், கட்சியின் மீதான மக்கள் நம்பிக்கை சரிந்துவிடும்.

அரசியல் பொறுப்புணர்வுடன் இந்த எச்சரிக்கை மணிகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் கையாள வேண்டும். நிர்வாக ரீதியாக எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்தும், தொண்டர்களின் முதிர்ச்சியற்ற செயல்களால் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. இது தொடர்ந்தால், TVK அரசுக்குக் கிடைத்த மக்கள் செல்வாக்கு குறையும். அது பெரிய அரசியல் பின்னடைவாக மாறிவிடும்.

எனவே, முதலமைச்சர் உடனடியாகக் கட்சி நிர்வாகத்தை சீரமைத்து, அத்துமீறும் தொண்டர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்கள் மற்றும் நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழகம் ஒரு நல்லாட்சியை எதிர்பார்த்திருக்கும் இந்த கட்டத்தில், ஊழல் ஒழிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுடன் கட்சி ஒழுங்கையும் உறுதிப்படுத்தினால் மட்டுமே TVK அரசு நீண்டகால வெற்றியைப் பெற முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+