தமிழர்களின் குணாதிசயங்கள் இது.. யாதும் ஊரே யாவரும் கேளிர்.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெற்றது. ஜூலை 28ம் தேதி நடத்தப்பட்ட தொடக்க விழா முதல் நிறைவு விழா வரை தமிழக அரசு சிறப்பாக நடத்தியது. சுமார் 12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் எவ்வித பிரச்னையும் இல்லாமல், அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தமிழக அரசு
சர்வதேச வீரர்கள் தங்க வைக்கப்பட்ட விடுதிகள் முதல் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகள் வரை ஒவ்வொன்றையும் தமிழக அரசு கவனமாகவும், ஆர்வத்துடன் செய்தது. அவ்வப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் பகுதிகளுக்கு சென்ற அரசியல் தலைவர்களும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

நிறைவு விழா
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழக விளையாட்டு கலாச்சாரத்திலும், பொருளாதார மேம்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நேற்று முன் தினம் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அணிகளுக்கும் பதக்கங்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

தமிழில் ட்வீட் செய்த பிரதமர்
செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்தப் போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களது வார்த்தைகளுக்கு நன்றி. விருந்தோம்பல் மற்றும் சுயமரியாதை ஆகியவை தமிழர்களின் பிரிக்க முடியாத குணாதிசயங்கள். செஸ் ஒலிம்பியாட் போன்று சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு எதிர்காலத்தில் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். இறுதியாக யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications