200 ஆண்டுகள் பழமையான மரம்.. வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்த முதல்வர்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
சென்னை: பழம்பெருமை வாய்ந்த ஆனைப்புலி பெருக்கமரத்தின் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆனைப்புலி பெருக்கமரம் உள்ளது.
Recommended Video
பழம் பெருமை வாய்ந்த இந்த மரம் இந்த மருத்துவமனைக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கும் புராதான சின்னமாக விளங்குகிறது.

ஆனைப்புலி பெருக்கமரம்
இத்தகைய பெருமை வாய்ந்த ஆனைப்புலி பெருக்கமரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். மேலும், ஆனைப்புலி பெருக்கமரம் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனைப்புலி பெருக்க மரத்தின் சிறப்புகள் இந்த கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. முதல்வர் குறிப்பேடு திறந்து வைக்கும் அளவுக்கு இந்த ஆனைப்புலி பெருக்க மரம் என்ன சிறப்புகளை பெற்றுள்ளது என்பது பற்றி காண்போம்.

சிறப்புகள் என்ன?
உலகின் பழமையான மரங்களில் ஒன்றான ஆனைப்புலி பெருக்க மரம் ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்ததாகும். இந்த மரம் சுமார் 500 ஆண்டுகள் நிலைத்து நிற்க கூடியது. நீரை தன்னகத்தே தேக்கி வைக்க கூடிய சிறப்பு அம்சம் ஆனைப்புலி பெருக்க மரத்துக்கு உண்டு. மிகவும் தூய்மையான காற்றை தரக்கூடிய இந்த மரம் இந்தியாவில் 6 இடங்களில் மட்டுமே இருக்கிறது. 37 அடி சுற்றளவு கொண்ட ஆனைப்புலி பெருக்க மரம், தமிழகத்தில் அதுவும், இந்தியாவிலேயே பழமை வாய்ந்த மருத்துவமனையில் இருப்பது மிகச்சிறப்பான ஒன்றாகும்.

மக்களுக்கான திட்டம்
இதனை தொடர்ந்து ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் மக்களை தேடி மருத்துவம் மையத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின்னர் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- தமிழகத்தில் தி.மு.க எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தலைவர் கலைஞர் ஒவ்வொரு பிறந்தநாளையும் தனக்காக கொண்டாடாமல் மக்களுக்கான திட்டங்களை செய்லபடுத்துவார்.

அறுவை சிகிச்சை
தலைவர் வழியைத்தான் இப்போது நாம் பின்பற்றி வருகிறோம். அனைவரது கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி அமைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் 4000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications