Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளிநாடுகளுக்கு பறக்கும் முதலமைச்சர்.. ஜப்பான், சிங்கப்பூர் செல்லும் ஸ்டாலின்! இதான் விசயமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே நேற்று உறுதிபடுத்தி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் பன்னாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுவது வழக்கம், அந்த வகையில் வரும் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட இருக்கிறது. இதற்கான பணிகளில் இப்போதே அரசு ஆயத்தமாகி வருகிறது.

CM Stalin going to visit Japan and Singapore to invite for World Investor Conference

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு நேரில் அழைப்பு விடுக்க இருக்கிறார். இதற்காக வரும் 23 ஆம் தேதி அவர் சென்னையில் இருந்து ஜப்பானுக்கு விமானம் மூலம் செல்ல இருக்கிறார்.

ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1891 கோடி ரூபாய் முதலீட்டில் 2000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி ஆலையை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அமைக்க உள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசு மற்றும் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலான அந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். அந்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ஜப்பான் செல்லும் தகவலை உறுதிபடுத்தினார்.

அவர் பேசுகையில், "கடந்த ஆண்டு நான் அதிகம் கலந்துகொண்டிருக்கக்கூடிய நிகழ்ச்சிகளின் வரிசையில் எடுத்துப் பார்த்தால், தொழில் துறை நிகழ்ச்சிகள்தான் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டும், தொழில் துறை சார்ந்த நிகழ்ச்சிகளே அதிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

CM Stalin going to visit Japan and Singapore to invite for World Investor Conference

ஒவ்வொரு முறையும் நான் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்களையும், அந்தத் துறையினுடைய செயலாளரையும் சந்திக்கும்போதெல்லாம், "இதுவரை போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன? புதிய முதலீடுகள் எப்போது வரும்? புதிதாக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்?" என்று நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்.

2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக வரும் 23-ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குச் செல்ல இருக்கிறேன். இந்த நிலையில், மிக ஸ்மார்ட்டாக, முன்கூட்டியே, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தை வைத்து, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

தொழில் துறை நிகழ்ச்சிகள் என்பவை அந்தத் துறை நிகழ்ச்சிகளாக மட்டும் அமைவது இல்லை, இந்த மாநில வளர்ச்சியினுடைய நிகழ்ச்சிகளாகவும் அமைந்திருக்கின்றன. மின்னணுவியல் துறையில், உலகளாவிய முன்னணி நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், அதற்கான ஆலை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைத்து இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்து இக்கிறது." என்று தெரிவித்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+