Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனவுகள் நனவாகியது! மொத்தம் ரூ.8,801 கோடி.. திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ரூ.8,801.93 கோடி செல­வில் திட்­டப் பணி­களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் இன்று தலை­மைச் செய­ல­கத்­தில், பல்­வேறு துறை­க­ளின் சார்­பில் ரூ.8,801.93 கோடி செல­வில் முடி­வுற்ற திட்­டப் பணி­களை மக்­கள் பயன்­பாட்­டிற்­கா­கத் திறந்து வைத்து உள்ளார். சென்னை மெட்ரோ ர­யில் நிறு­வ­னம் சார்­பில் மத்­திய சதுக்­கத் திட்­டத்­தின் கீழ், ரா­ஜீவ் காந்தி அரசு பொது மருத்­து­வ­மனை மற்­றும் சென்னை மருத்­து­வக் கல்­லூரி அரு­கே, ஈவி­னிங் பஜார் சாலை மற்­றும் ஈவேரா பூந்தமல்லி நெடுஞ்­சாலை சந்­திப்­பிற்கு குறுக்­கே­யும் ரூ.9.75 கோடி செல­வில் கட்­டப்­பட்­டுள்ள இரண்­டாம் சுரங்க நடை­பாதையை திறந்து வைத்தார்.

CM Stalin inaugurate the projects in Tamil Nadu today at a cost of Rs.8,801.93 crore

அத்துடன் சிவ­கங்கை மற்­றும் தூத்­துக்­குடி மாவட்­டங்­க­ளில் நீர்­வ­ளத்­துறை சார்­பில் ரூ.111.35 கோடி செல­வில் கட்டி முடிக்­கப்­பட்­டு உள்ள பாசன கட்­ட­மைப்­பு­கள் மற்­றும் வெள்­ளத் தடுப்­புப் பணி­கள் மற்­றும் திருச்­சி­ராப்­பள்ளி மாவட்­டம், முக்­கொம்­பில், கொள்­ளி­டம் ஆற்­றில் ரூ.414 கோடி செல­வில் புதி­தாக கட்டி முடிக்­கப்­பட்­டு உள்ள நீரொ­ழுங்கி; நீர்­வ­ளத்­துறை சார்­பில் செயற்­பொ­றி­யா­ளர்­கள் மற்­றும் உதவி செயற்­பொ­றியாளர்­க­ளின் பயன்­பாட்­டிற்­காக ரூ.4.48 கோடி மதிப்­பி­லான 50 ஈப்­பு­களை வழங்­கினார்.

வேளாண்மை - உழ­வர் நலத்­து­றை­யின் சார்­பில் ரூ.210.75 கோடி செல­வில் கட்­டப்­பட்­டுள்ள வேளாண் கட்­ட­டங்­கள்; வரு­வாய் மற்­றும் பேரி­டர் மேலா ண்­மைத்­துறை சார்­பில் ரூ.12.27 கோடி செல­வில் கட்­டப்­பட்­டுள்ள கோட்­டா­சி­யர் குடி­யி­ருப்­பு­கள், வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கக் கட்­ட­டம், வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கம் மற்­றும் குடி­யி­ருப்­பு­கள், குறு­வட்ட வரு­வாய் ஆய்­வா­ளர் அலு­வ­ல­கம் மற்­றும் குடி­யி­ருப்­பு­கள், கிராம நிரு­வாக அலு­வ­ல­கம் மற்­றும் குடி­யி­ருப்பு, தமிழ்­நாடு மின் தொட­ர­மைப்­புக் கழ­கம் மற்­றும் தமிழ்­நாடு மின் உற்­பத்தி மற்­றும் பகிர்­மா­னக் கழ­கத்­தின் சார்­பில், ரூ.7300.54 கோடி செல­வில் நிறு­வப்­பட்­டுள்ள 20 புதிய துணை மின் நிலை­யங்­களை இன்று திறந்து வைத்தார் ஸ்டாலின்.

மேலும் ரூ.209.01 கோடி செல­வில் 67 துணை மின் நிலை­யங்­க­ளில் 1089 எம்.வி.ஏ அள­விற்கு திறன் மேம்­ப­டுத்­தப்­பட்ட 69 மின் மாற்­றி­க­ளின் செயல்­பாடு மற்­றும் நாகப்­பட்­டி­னத்­தில் ரூ.4.95 கோடி செல­வில் கட்­டப்­பட்­டுள்ள மேற்­பார்­வைப் பொறி­யா­ளர் அலு­வ­ல­கக் கட்­ட­டம், செய்தி மக்­கள் தொடர்­புத் துறை சார்­பில் ரூ.7.85 கோடி செல­வில் கட்­டப்­பட்­டுள்ள தமி­ழ­றி­ஞர் டாக்­டர் மு. வர­த­ரா­ச­னார் அவர்­க­ளுக்கு திரு­வு­ரு­வச் சிலை­யு­டன் கூடிய குவி­மாட அரங்­கம், தியாகி அண்­ணல் தங்கோ அவர்­க­ளுக்கு திரு­வு­ரு­வச் சிலை, இரட்­டை­மலை சீனி­வா­சன் அவர்­க­ளின் திரு­வு­ரு­வச் சிலை­யு­டன் கூடிய நினைவு மண்­ட­பம், பேர­ர­சர் பெரும்­பி­டுகு முத்­த­ரை­யர் மணி­மண்­ட­பம், சர்.ஏ.டி. பன்­னீர்­செல்­வம் மணி­மண்­ட­பம் மற்­றும் எம்.கே. தியா­க­ராஜ பாக­வ­தர் மணி­மண்­ட­பம், வீரன் சுந்­த­ர­லிங்­கம் மணி­மண்­ட­பத்­தில் குதி­ரை­யில் அமர்ந்து போர்­பு­ரி­வது போன்று கம்­பீர தோற்­றத்­து­டன் கூடிய புதிய சிலையை திறந்து வைத்தார்.

தமிழ் வளர்ச்­சித் துறை சார்­பில் தஞ்­சா­வூர், தமிழ்ப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மொழிப்­பு­லத் துறை­யில் ரூ.7 லட்­சத்து 12 ஆயி­ரம் செல­வில் நிறு­வப்­பட்­டுள்ள கவி­ஞர் தமிழ்­ஒளி அவர்­க­ளின் மார்­ப­ளவு சிலை, கால்­நடை பரா­ம­ரிப்­புத் துறை சார்­பில் ரூ.14.14 கோடி செல­வில் கட்­டப்­பட்­டுள்ள கட்­ட­டங்­கள், உயர்­கல்­வித் துறை சார்­பில், அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூ­ரி­கள், பொறி­யி­யல் கல்­லூ­ரி­கள், அரசு பல­வகை தொழில்­நுட்­பக் கல்­லூ­ரி­கள் மற்­றும் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் ஆகி­ய­வற்­றில் ரூ.134.15 கோடி செல­வில் கட்­டப்­பட்­டுள்ள கல்­வி­சார் கட்­ட­டங்­களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கத்­தின் சார்­பில் ரூ.6.67 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள 2 வட்ட செயல்­முறை கிடங்­கு­கள் மற்­றும் 2.50 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள 4 நிரந்­தர நேரடி நெல்­கொள்­மு­தல் நிலை­யங்­கள், திண்­டுக்­கல் மாவட்­டம், ஒட்­டன்­சத்­தி­ரம் வட்­டம், காளாஞ்­சி­பட்­டி­யில் ரூ.10.15 கோடி செல­வில் கட்­டப்­பட்­டுள்ள கலை­ஞர் நூற்­றாண்டு ஒருங்­கி­ணைந்த போட்­டித்­தேர்வு பயிற்சி மையம், மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை சார்­பில் மது­ரை - ­அ­ரசு ரா­ஜாஜி மருத்­து­வ­ம­னை­யில் ரூ.313. 25 லட்­சம் ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள 6 தளங்­கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்­ட­டம் மற்­றும் நவீன மருத்­துவ உப­க­ர­ணங்­கள், ரூ.29 கோடி செல­வில் அரசு ரா­ஜாஜி மருத்­து­வ­மனை, தோப்­பூர் அரசு காச­நோய் மருத்­து­வ­மனை, மதுரை அரசு மருத்­து­வக் கல்­லூரி, உசி­லம்­பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்­து­வ­மனை, சம­ய­நல்­லூர், சுகா­தா­ரம் மற்­றும் குடும்­ப­நல பயிற்சி மையம் மற்­றும் துணை செவி­லி­யர் பயிற்­சிப் பள்ளி ஆகிய இடங்­க­ளில் கட்­டப்­பட்­டுள்ள மருத்­து­வத் துறை கட்­ட­டங்­களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+