முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் "மக்களுடன் ஸ்டாலின்" செயலி.. என்ன சிறப்புகள்?
சென்னை: மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
தந்தை பெரியார் பிறந்த நாள், திமுகவை தொடங்கிய பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15) , திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என மூன்றையும் ஒன்றிணைந்து முப்பெரும் விழா என்ற பெயரில் ஆண்டுதோறும் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைந்த பிறகும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முப்பெரும் விழா வேலூரை அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட மேடை பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்துள்ளன.
அந்த பகுதியில் திமுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் ரயில் மூலம் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காட்பாடி வந்தார். அவருக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் நேற்று இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார்.
இன்று காலை 10.15 மணிக்கு வேலூர் மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
முப்பெரும் விழாவுக்காக வேலூரை அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட கோட்டை வடிவிலான மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த முப்பெரும் விழாவில் மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
முதல்வரின் கள செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையிலும் எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அது போல் அரசு திட்டங்கள், ஒவ்வொரு தொகுதிகள் பற்றிய விரிவான தகவல்கள், அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களும் இந்த செயலியில் இருக்கும்.












Click it and Unblock the Notifications