Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைத்தறி ஆடைகளுக்கு பிராண்ட் பெயர்... நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் புதிய அணுகுமுறையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. பாரம்பரியத்தை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது, அனைத்து வயதினருக்கும் ஏற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைப்பது ஒருங்கிணைந்த விற்பனை வளாகங்களை உருவாக்க வ

Subscribe to Oneindia Tamil

சென்னை: கைத்தறியை உயர் வருவாய் பிரிவினரிடம் கொண்டு செல்வதன் மூலம் நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்த வேண்டும். அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த அறிவுறுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர் துறையின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதல்வர் வழங்கினார்.

அப்போது பேசிய முதல்வர் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் புதிய அணுகுமுறையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. பாரம்பரியத்தை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது, அனைத்து வயதினருக்கும் ஏற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைப்பது ஒருங்கிணைந்த விற்பனை வளாகங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நெசவாளர்கள்

நெசவாளர்கள்

கைத்தறியை உயர் வருவாய் பிரிவினரிடம் கொண்டு செல்வதன் மூலம் நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்த வேண்டும். அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த அறிவுறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை உருவாக்க வேண்டும். பட்டு நெசவாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் இந்த உத்தரவு கைத்தறி நெசவாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

பட்டுப்புழு உற்பத்தி

பட்டுப்புழு உற்பத்தி

இதேபோல் பனை வெல்ல உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மாவட்ட பனை வெல்ல உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சம்மேளன அலுவலக வளாகங்களில் பொது பயன்பாட்டு மையங்களை நிறுவிட வேண்டும். தமிழ்நாட்டில் பட்டுப்புழு உற்பத்திக்கு உதவும் வகையில் மல்பெரி பயிரிடும் பரப்பை ஒரு லட்சம் ஏக்கராக உயர்த்த வேண்டும். வெண்பட்டு உற்பத்தியை விரிவுபடுத்த 1,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை செயல்படுத்த வரைவு திட்ட அறிக்கையை அரசுக்கு சமர்பிக்க வேண்டும்.

விற்பனை இலக்கு

விற்பனை இலக்கு

பூம்புகார் விற்பனை நிலையங்கள் மூலம் நடைபெறும் விற்பனையை 35 கோடியில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளில் 100 கோடி ரூபாயாக உயர்த்த விற்பனை நிலையங்களை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். குறிப்பாக சோப்பு, தேன் மற்றும் இதர பொருட்களை மக்களை கவரும் வகையில் மாற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கதர் கிராம பொருட்கள்

கதர் கிராம பொருட்கள்

கதர் கிராம பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்கள், டிவி சேனல்கள் மூலம் விளம்பரப்படுத்துதல் மற்றும் தனி செயலியை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+