அப்ப வாரம் 2 நாள்! இப்ப 10 நாட்களுக்கு ஒரு முறை! அவ்வளவு பணிச்சுமை எனக்கு! முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை: எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தனது கொளத்தூர் தொகுதிக்கு வாரம் 2 நாட்கள் வந்து சென்றதாகவும் இப்போது தனக்கிருக்கும் பணிச்சுமை காரணமாக பத்து நாட்களுக்கு ஒரு முறை வந்து செல்வதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கழக முன்னோடிகள் இல்லையென்றால் கட்சியே இல்லை என்றும் அவர் நினைவுகூர்ந்து பேசினார்.
அதன் விவரம் வருமாறு;

வாரம் 2 நாட்கள்
''கொளத்தூர் தொகுதியிலிருந்து நான் மூன்று முறை உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சி வரிசையில் இருந்த நேரத்தில், என்னதான் தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் நடத்திக் கொண்டிருந்தாலும் கட்சியினுடைய பணியின் காரணமாக பல்வேறு கழகத் தோழரின் இல்லங்களில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளில், பொதுக்கூட்டங்களில், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய அந்த வாய்ப்பில் நான் ஈடுபட்டிருந்தாலும், எப்படியும் வாரத்திற்கு இரண்டு முறை இந்தத் தொகுதிக்கு நான் வராமல் இருந்ததில்லை.''

10 நாட்களுக்கு ஒரு முறை
''இப்பொழுது முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற காரணத்தில் இன்னும் எவ்வளவு பளு, எவ்வளவு பணி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே, இந்த சூழ்நிலையிலும், எப்படி எதிர்க்கட்சி வரிசையில் இருந்த நேரத்தில் நான் பணியாற்றி இருக்கிறேனோ, அதைவிட இன்னும் அதிகமாக இந்தத் தொகுதிக்கு பணியாற்றிட வேண்டும் என்று விரும்பக்கூடிய நிலையில் இருந்தாலும், எப்படியாவது பத்து நாளைக்கு ஒரு முறையாவது இந்த தொகுதிக்கு வர வேண்டும் என்று முடிவு செய்து அந்த பணியை நிறைவேற்றி வருகிறேன்.''

பெருமை -வரவேற்பு
''எத்தனையோ நிகழ்ச்சிகளில், எத்தனையோ விழாக்களில் நான் கலந்து கொள்கிறபோது எனக்கு உரிய அந்த வரவேற்பு, உரிய அந்த உபசரிப்பு இவைகளெல்லாம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதெல்லாம் எனக்கு பெருமையாக இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி இந்தக் கொளத்தூர் தொகுதிக்கு வருகிறபோது இன்னும் அதிகமான அளவிற்கு எனக்கு பெருமை, வரவேற்பு கிடைக்கிறது.''

முன்னோடிகள்
''கழக முன்னோடிகள் இல்லையென்றால் மேயர் இல்லை, சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. ஏன் இந்தக் கட்சியே இல்லை. நம்முடைய ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் எல்லாத் திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருந்தாலும், எல்லாத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளை நாம் செய்து கொண்டிருந்தாலும், கல்விக்கும் மருத்துவத்துக்கும் நாம் அதிகமான அளவிற்கு அக்கறை செலுத்தி கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.''
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications