தமிழக தேர்தலை மனதில் வைத்தாவது! பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கப்படுமா? ஸ்டாலின் கேள்வி
சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்போடு நின்று போகாமல் முறையான நிதியை இந்த பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய பட்ஜெட் இன்றைய தினம் தாக்கலாகும் நிலையில் அவர் இத்தகைய கோரிக்கையை மத்திய அரசுக்கு வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: #UnionBudget2026: வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?

📚 விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி
🚉 கோவை, மதுரை மெட்ரோ இரயில்,
💧 தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் #JalJeevan திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி,
🛤️ புதிய இரயில்வே திட்டங்கள்,
💼 நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு.

இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை #AIIMS போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம். இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்ச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நினைவூட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications