Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித்ஷாவிடம் விழுந்து எடப்பாடி பழனிசாமி சரண்டர் ஆகிவிட்டார்.. முதல்வர் ஸ்டாலின் நேரடி அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமித்ஷாவிடம் விழுந்து எடப்பாடி பழனிசாமி சரண்டர் ஆகிவிட்டார் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை பாஜகவின் பகல் கனவு பலிக்காது என்று கூறிய ஸ்டாலின், வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் திமுக சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முன்னெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

CM Stalin vs EPS

இதில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 2026 சட்டசபைத் தேர்தலில் வென்று 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும். 6வது முறையாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் நாம், 7வது முறையாக ஆட்சி அமைப்போம்.

தேர்தல் எனும் தேர்வுக்கு முன்னதாக நாம் செய்யும் ஒரு ரிவிஷன் தான் பயிற்சிக் கூட்டம். தமிழ்நாட்டு மக்கள் திராவிட ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். 2019ஆம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். சுணங்கி சும்மா இருந்துவிட்டால், நாம் ஒரே இடத்தில் தேங்கிவிடுவோம்.. அது தேக்கம்..

உழைப்பை கொடுத்து லட்சியத்தை நோக்கி இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது இயக்கம். 2021 தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் மீதமுள்ள சிலவற்றையும் நிச்சயம் நிறைவேற்றி தருவோம். திமுக அரசின் திட்டங்களின் சாதனைகள் மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் சென்று சேர்ந்திருக்கிறது. 2026 சட்டசபைத் தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற போகிறோம்.

நமது தொடர் வெற்றிகள் நமது எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2026ல் நடக்கவிருக்கும் தேர்தல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல். தலைநிமிர்ந்து நிற்கும் நம் ஆட்சியா, டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா என்று தீர்மானிக்கும் தேர்தல். இந்தி, சமஸ்கிருதம், ஜிஎஸ்டி, புதிய கல்விக் கொள்கையின் பெயரால் தமிழ்நாட்டுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது.

அதனால் தமிழ்நாட்டின் சுயமரியாதையையும், தனித்தன்மையையும் காப்பாற்றப் போகும் தேர்தல். தமிழ்நாட்டை அழிக்க இன எதிரிகளும், தமிழ் துரோகிகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வருகிறார்கள். திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை பாஜகவின் பகல் கனவு பலிக்காது. அது அவர்களுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் பாஜக குறுக்கு வழிகளை நாடுகிறது.

வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். உண்மையான வாக்காளர்கள் அனைவரும் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். பெயரளவில் திராவிட கட்சியாக இருந்த அதிமுகவை அமித்ஷாவிடம் சரண்டர் செய்தவர் எடப்பாடி பழனிசாமி.

விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறிப் பார்த்தார். ஆனால் யாரும் போகவில்லை. எடப்பாடி பழனிசாமி பேசுவதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. கட்சியின் உரிமைகளையே பாஜகவிடம் அடகு வைத்தவர்களுக்கு மக்கள் உரிமைகளை பற்றி கவலைப்பட நேரமிருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+