தலைமை செயலகத்தில் உள்ள தேவாலயத்திற்கு திடீரென சென்ற முதல்வர் விஜய்.. வியந்து போயிட்டாராமே!
சென்னை: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களை அவர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க புனித மேரி தேவாலயத்தையும் அவர் பார்வையிட்டார். அங்குள்ள பழங்கால ஆர்கன் உள்ளிட்டவற்றை விஜய் பார்வையிட்டார். மத்திய அரசின் தொல்லியல் துறை அலுவலகங்கள் உள்ள இடம், ராணுவ மைதானம் ஆகியவற்றையும் விஜய் பார்வையிட்டார்.
தமிழக முதல்வர் விஜய் நேற்று சென்னை தலைமை செயலக வளாகத்தை சுற்றி பார்த்தார். நேற்று மதிய உணவை முடித்த பிறகு தலைமை செயலகத்தை சுற்றி பார்க்க பேட்டரி காரில் விஜய் புறப்பட்டார். வழக்கமாக கோட் அணிந்துகொண்டே தலைமை செயலகத்தில் காணப்படும் விஜய் நேற்று கோட்டை கழற்றிவிட்டு, வெள்ளை நிற சர்ட், கருப்பு நிற பேண்ட் அணிந்து இருந்தார்.

தலைமை செயலக தேவாலயத்தில்..
பேட்டரி காரில் தலைமை செயலக வளாகத்தை சுற்றி வந்த விஜய்யை காண தலைமை செயலக ஊழியர்களும் ஆர்வம் காட்டினர். இதனால், பலத்த பாதுகாப்பு புடை சூழ விஜய் அழைத்து செல்லப்பட்டார். தலைமை செயலகத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் தேவாலயத்திற்கு விஜய் சென்றார். அங்குள்ள பழங்கால ஆர்கன் உள்ளிட்டவற்றை விஜய் பார்வையிட்டார்.
தொடர்ந்து அங்கிருந்து மத்திய அரசின் தொல்லியல் துறை அலுவலகங்கள் உள்ள இடம், ராணுவ மைதானம் ஆகியவற்றையும் பார்வையிட்ட விஜய், கோட்டை அருங்காட்சியகத்திற்கு சென்றார். அரை மணி நேரத்திற்கும் மேலாக கோட்டையை விஜய் சுற்றி பார்த்தார். தலைமைச் செயலகத்தைச் சுற்றியிருந்த அகழி, அதில் முதலைகள் இருந்த நீண்டகால வரலாறு, மற்றும் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் ஆகியவை பற்றியும் முதல்வர் விஜய்க்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
பேட்டரி காரில் சென்ற விஜய்
இதனை ஆர்வமாக விஜய் கேட்டறிந்தார். அரை மணிநேரத்திற்கும் மேலாக கோட்டையை சுற்றி பார்த்த விஜய், பின்னர் தனது அலுவலக அறைக்கு சென்றார். விஜய்யை பார்ப்பதற்காக அங்கு பணியாற்றும் ஊழியர்கள், அங்கு இருப்பவர்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வம் காட்டினர். பேட்டரி காரில் சென்ற போது அங்கு திரண்டு இருந்த மக்களை பார்த்த விஜய் உற்சாகமாக கை அசைத்தார்.
விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் பலரும் தங்கள் செல்போனிலும் அவரை படம் பிடித்தனர். தமிழக முதல்வராக விஜய் கடந்த 10 ஆம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற நாளில் இருந்து விடுமுறை நாட்கள் நீங்கலாக நாள்தோறும் முதல்வர் விஜய் காலை 10 மணிக்கு முன்பாக தலைமை செயலகம் வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளார். மாலை 4 மணிக்கு பிறகே தலைமை செயலகத்தில் இருந்து புறப்படும் விஜய், அலுவல் ஆய்வு கூட்டங்கள் துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை தொடர்ந்து நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தலைமை செயலக ஊழியர்கள் இடையே விஜய்யின் இந்த செயல் வியப்பை அளித்துள்ளதாம். தலைமை செயலகத்திற்கு 10 நாட்களுக்கும் மேலாக விஜய் வந்த நிலையில், இந்த பிரம்மாண்டமான வளாகத்தை முழுமையாக ஆய்வு செய்ய விஜய் விரும்பியுள்ளார். இதன் காரணமாக, இன்று ஒரு விரிவான ஆய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
"ஜோசியக்காரர் சொன்னாரே" விஜயின் கயிறும் ராகுலின் கேக்கும்! விடியல் பயணம் மட்டும் இல்லேனா? லியோனி நச் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன?












Click it and Unblock the Notifications