அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் அறிய வேண்டிய பெரிய மாற்றம்.. கருணை அடிப்படை பணி நியமன விதி மாறியது
சென்னை: தமிழ்நாட்டில் கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான விதிகளை திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டிருக்கிறது. என்ன திருத்தம் என்றால், காலிப் பணியிடங்களின் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்குள் பணி வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இது வரும் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பது, அரசுப் பணியில் இருக்கும்போதே காலமான அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவும் அருமையான திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ், இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தகுதியான நபருக்கு அரசு வேலை வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறது.

கருணை அடிப்படையில் பணி: குடும்ப உறவில் யார் விண்ணப்பிக்கலாம்?
இறந்த அரசு ஊழியரின் மனைவி/கணவர் அல்லது அவரது மகன், மகள், தத்து மகன்/மகள், அல்லது உரிய விதிகளின்படி குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம். திருமணம் ஆகாதவர் என்றால், அண்ணன், தம்பி என யாராவது ஒரு குடும்ப உறுப்பினருக்கு கிடைக்கும்.
கல்வித் தகுதி என்ன
விண்ணப்பதாரரின் கல்வித் தகுதியின் அடிப்படையில் குரூப் C அல்லது குரூப் D பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் வழங்கப்படும். இறந்த ஊழியர் வகித்த பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை. அவர் என்ன வேலை பார்த்தாலும் குரூப் C அல்லது குரூப் D பிரிவுகளில் உள்ள அரசு பணிதான் வழங்கப்படும். கருணை அடிப்படையில் பணி என்பதால், அரசு அவர்களின் வாழ்வாதாரம் கருதி பணியினை வழங்குகிறது.
கருணை பணி நியமனம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு
அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தள்ளது. அதேநேரம் வயது வரம்பை பொறுத்தவரை விண்ணப்பிப்பவரின் வயது குறைந்தபட்சம் 18 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்புகள் வயது வரம்பு நிர்ணய விதிகள் அடிப்படையில் உள்ளது. பொதுவாக, கணவன்/மனைவி அல்லது பெற்றோருக்கு 50 வயதும், மகன்/மகள்/சகோதரன்/சகோதரிக்கு 40 வயதும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் குடும்பத்தில் வேறு யாரும் அரசுப் பணியில் இருக்கக்கூடாது என்பது முக்கியமான விதியாகும்.
புதிய விதி மாற்றம் என்ன
அதேநேரம் அரசு கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் தொடர்பான விதிகளில் தமிழ்நாடு அரசு சில திருத்தங்களை செய்திருக்கிறது. இதன்படி மாநில அளவிலான பதிவு மூப்புப் பட்டியல் என்பது இனிமேல், மாவட்ட வாரியாக இல்லாமல், மாநில அளவில் ஒரு பதிவு மூப்புப் பட்டியல் (seniority list) தயாரிக்கப்பட உள்ளது.அதேபோல் காலிப்பணியிடங்களின் அடிப்படையில், மூன்று ஆண்டுகளுக்குள் பணி நியமனம் வழங்கப்படும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் மாநில அளவில் மூப்பு பட்டியல் வெளியிட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. திருத்தம் செய்யப்பட்ட பணி நியமனம் ஆகஸ்ட்4ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications