நினைச்ச நேரம் எல்லாம்.. இப்போ ஏமாத்திட்டாரு! விஜய் டிவி நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பரபர புகார்!
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக பிரபலமான நாஞ்சில் விஜயன் மீதான புகார் தற்போது அதிர்வலை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு திருநங்கை அளித்த மனுவில், தன்னை நாஞ்சில் விஜயன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்டுகளாக பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு பின்னர் என்னை ஏமாற்றிவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.
நாஞ்சில் விஜயன், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தவர். மேலும், சில திரைப்படங்களில் காமெடியனாகவும் நாஞ்சில் விஜயன் நடித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்த நிலையில், நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

நாஞ்சில் விஜயன்
அதில், 15 ஆண்டுகளாக விஜய் டிவியில் பணியாற்றி வரும் ஒரு திருநங்கை, கடந்த 5 வருடங்களாக நாஞ்சில் விஜயனுடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், அவர் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு தன்னை ஒதுக்கிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் அந்த திருநங்கை.
திருநங்கை புகார்
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த திருநங்கை, "நான் வில்லிவாக்கம் வீட்டில் தனியாகத்தான் வசித்து வந்தேன். அந்த வீட்டிற்கு நாஞ்சில் விஜயன் எப்போதும் வந்து செல்வார். நாங்கள் இருவரும் காதலிப்பது அவர்களுடைய குடும்பத்திற்கு நன்றாகவே தெரியும். அவருக்கு திருமணமாவதற்கு முன்பு வரை, அவரின் குடும்பத்தினர் என்னிடம் நன்றாகத்தான் பேசி வந்தார்கள். ஆனால், நாஞ்சில் விஜயனுக்கு திருமணமானதும், என்னிடம் யாருமே பேசுவது இல்லை. என்னை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.
பாலியல் புகார்
திருமணமான பிறகும் என்னுடன் பழகிக்கொண்டு தான் இருந்தார். கடந்த ஆறு மாதத்துக்கு முன் நாங்கள் இருவரும் ரெசாட் போய் இருந்தோம். அதன் பின் திடீரென ஒரு நாள், வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது. குழந்தை இருக்கிறது. அதற்கு மேல் நாம் பழக வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால், நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நான் திருநங்கை என்பதை தெரிந்துதான், என்னை காதலித்தார். ஆனால், இப்போது என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டி ஒதுக்கும்போது மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக நானும் அவரும் பழகினோம். தன்னுடன் பழகிய அவர், பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டார்" என கூறியுள்ளார்.
சென்னை காவல் துறை
இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் வகையில் சென்னை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் தனக்கும் அந்த திருநங்கைக்கும் எந்த தொடர்பும் கிடையாது என விளக்கம் அளித்திருக்கிறார் நாஞ்சில் விஜயன். மேலும் புகார் கொடுத்து இருக்கும் திருநங்கையின் குற்றசாட்டுகள் பொய் எனவும் கூறி இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சின்னத்திரை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications