எலிசபெத் மகாராணி மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்! 2 நொடி மவுன அஞ்சலி செலுத்தி மரியாதை!
சென்னை: இங்கிலாந்து எலிசபெத் மகாராணி மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்க தீர்மானம் வாசிக்கப்பட்டதோடு அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதேபோல் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் சிலருக்கும் தமிழக சட்டசபையில் இரங்கல் குறிப்பும், இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட்டது.
இது மட்டுமல்லாமல் எலிசபெத் மகாராணி உள்ளிட்டோருக்கு சட்டசபையில் 2 நொடி மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபை கூட்டத்தின் முதல் நாளான இன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான ஹமீது இப்ராஹிம், கே.கே.வீரப்பன், ஏ.எம்.ராஜா, பச்சையப்பன்,புருஷோத்தமன், திருவேங்கடம், ஜனார்த்தனன், தர்மலிங்கம், ஹக்கீம், கோவை தங்கம் ஆகியோருக்கு முதல் வேலையாக இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. இவர்கள் பதவி வகித்த காலம் மற்றும் வெற்றிபெற்ற தொகுதிகள் பற்றி விவரமும் தெரிவிக்கப்பட்டது.

இரங்கல் தீர்மானங்கள்
அடுத்ததாக மறைந்த முக்கியப் பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அந்த வகையில் ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர குமரன் சேதுபதி, இந்திய விடுதலை போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், மலேசிய இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் துன் சாமிவேலு ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் சட்டசபையில் வாசிக்கப்பட்டன.

மவுன அஞ்சலி
இதேபோல் மறைந்த கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான மறைந்த முலாயம் சிங் யாதவ், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா ஆகியோருக்கும் சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு 2 நொடி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சட்டசபை ஒத்தி வைப்பு
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். அத்துடன் இன்றைய சட்டசபை நிகழ்வை முடித்து வைத்த சபாநாயகர் அப்பாவு, சட்டசபை மீண்டும் நாளை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார்.
-
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications