5 வருடமாக ஸ்டாலின் செய்ய யோசித்த ஒன்றை.. ஒரே வாரத்தில் விஜய் செஞ்சிட்டாரே.. திமுகவிற்கு பெரிய பாடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் 'பேச்சு சுதந்திரம்' என்கிற பெயரில் எல்லை மீறுபவர்கள் மீது எப்போது சட்டம் பாய்ந்திருக்கிறது என்று பார்த்தால், அதில் பல அரசியல் கணக்குகள் இருக்கும். சமீபத்தில் அரசியல் விமர்சகரும், முன்னாள் விஞ்ஞான் ஆலோசகருமான வி.பொன்ராஜ் மீது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கு, முன்பு ஆட்சியில் இருந்த திமுக-வுக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் பாடத்தை உணர்த்தியிருக்கிறது.

அதே நேரத்தில், தற்போது தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக அரியணையில் அமர்ந்து, தங்களை ஒரு வலுவான சக்தியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எப்படி ஒரு 'ஸ்ட்ராங் கார்டு' எடுத்து விளையாடுகிறது என்பதற்கும் இதுவொரு மிகச்சிறந்த உதாரணம்.

V Ponraj TVK

மௌனம் காத்த திமுக... மிரள வைத்த தவெக ஆளுமை!

கடந்த கால திமுக ஆட்சியில், சமூக வலைத்தளங்களிலோ அல்லது பொது மேடைகளிலோ திமுக தலைவர்களைப் பற்றியோ, முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரைப் பற்றியோ கடுமையான அவதூறுகளும், போலிச் செய்திகளும் (Fake News) பரப்பப்பட்டபோது திமுக எடுத்த நடவடிக்கைகள் என்ன? பெரும்பாலும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் ட்விட்டரிலும், முகநூலிலும் பதில் கருத்துகளைப் பதிவிடுவதோடு சரி. அல்லது ஏதேனும் சில தனிநபர்கள் மீது மிக மென்மையாக சட்டம் பாயும். ஆனால், கட்சியின் தலைமை நேரடியாகக் களமிறங்கி, "எங்கள் தொண்டனையோ, தலைவரையோ தொட்டால் விடமாட்டோம்" என்று ஆக்ரோஷமாக சட்டப்பூர்வப் போரைத் தொடுத்தது மிகக் குறைவு. ஏன் சில சினிமா விமர்சகர்கள் பொய் பரப்பிய போது கூட அதை ஸ்டாலின் தடுக்கவில்லை.

"நாம் ஏன் இவர்களைப் பெரிதுபடுத்த வேண்டும்? சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்" என்கிற மெத்தனமான அணுகுமுறையைத்தான் திமுக தன் ஆட்சிக் காலத்தில் பல நேரங்களில் கையாண்டது. ஆனால், இந்த 'அரசியல் நாகரிகம்' அல்லது 'மெத்தனம்' என்பது எதிரிகளுக்கு இன்னும் கூடுதல் துணிச்சலையே கொடுத்தது என்பதை திமுக உணர மறுத்துவிட்டது.

ஆனால், இங்கேதான் தற்போதைய ஆளுங்கட்சியான தவெக முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. தவெக தலைவர் விஜய், தன் கட்சியின் மகளிர் தொண்டர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வி.பொன்ராஜுக்கு எதிராக எடுத்த அணுகுமுறை, தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால திராவிடக் கட்சிகளுக்கு ஒரு சாட்டையடி. மார்ச் மாத இறுதியில், தவெக தலைவர் விஜய் நேரடியாகச் சென்னை டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று புகார் மனு அளித்தார். ஒரு கட்சியின் உச்சபட்ச தலைவர், தன் கட்சியின் மகளிர் அமைப்பினருக்காக நேரடியாக காவல் துறை தலைமை அலுவலகத்திற்குப் படியேறுவது என்பது சாதாரண விஷயமல்ல. அது கட்சித் தொண்டர்களுக்குக் கொடுத்த எனர்ஜி, அரசியல் வட்டாரத்தையே அதிர வைத்தது.

தவெக-வின் வியூகம்: சட்டப்படி சவட்டி எடுப்பது!

திமுக-வினர் பல நேரங்களில் மேடைகளில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதோடு நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் தவெக, விஜய் கொடுத்த புகாரோடு நிறுத்தாமல், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மகளிர் அணியினரைத் திரட்டி, பொன்ராஜுக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் புகார்களைக் குவிக்கச் செய்தது. அதன் விளைவாகவே, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW), தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடலூர் போலீஸார் பொன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் முதல்வர் விஜய் தன் எதிரிகளுக்குத் தெளிவான ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்: "எங்களைச் சாதாரணமாக எடை போடாதீர்கள். அரசியல் விமர்சனம் என்ற பெயரில் எல்லை தாண்டினால், சட்டத்தின் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களை முடக்குவோம்." இப்போது ஆட்சிக்கு வந்த உடன் வழக்கு போட்டு அதில் அதிரடி காட்டி உள்ளனர்.

திமுக கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?

அரசியல் ரீதியாகப் பல தசாப்த கால அனுபவம் கொண்ட திமுக, இன்று ஆட்சிக்கட்டிலில் இருக்கும் தவெக-விடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுதான். போலிச் செய்திகளையும், அவதூறுப் பேச்சுகளையும் கண்டும் காணாமல் இருப்பது ஜனநாயகப் பண்பல்ல; அது கட்சியின் வலிமையைக் குறைத்து மதிப்பிட வைக்கும் பலவீனம் என்பதை திமுக தனது ஆட்சிக் காலத்தில் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது.

திமுக-வின் இந்த 'ரியாக்ட் செய்யாத' பழைய பாணி, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு ஒரு பாதுகாப்பான தளத்தை உருவாக்கிக் கொடுத்துவிட்டது. ஆனால், விஜய் காட்டியுள்ள இந்தத் தீவிரம், "விமர்சனம் செய்யலாம், ஆனால் தனிநபர் ஒழுக்கத்தையோ, பெண்களின் கண்ணியத்தையோ சிதைத்தால் தப்ப முடியாது" என்கிற பயத்தை அரசியல் வட்டாரத்தில் விதைத்திருக்கிறது.

இனிவரும் காலங்களில், வெறும் ட்விட்டர் சண்டைகளோடு நிறுத்திக் கொள்ளாமல், தவெக பாணியில் சட்டப்பூர்வமாக, துரிதமாக, கட்சியின் ஒட்டுமொத்த பலத்தையும் காட்டி களமிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. பொன்ராஜ் மீதான தவெக-வின் இந்தச் சட்டப்போர், தமிழக அரசியலில் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+