காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்!
சென்னை: காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் குழப்பம் நீடித்து வரும் சூழலில், மாணிக்கம் தாகூர் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். தமிழ்நாடு தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள மாணிக்கம் தாகூர், அதற்கான கடிதத்தை மல்லிகார்ஜுன கார்கேவிடம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 22 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர்கள் பட்டியலையே வெளியிடாமல் இருக்கிறது. செல்வப்பெருந்தகை மற்றும் கிரிஷ் சோடங்கர் இருவரும் தேர்வு செய்த வேட்பாளர்கள் பட்டியலுக்கு காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஏப்ரல் 6ஆம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஏப்ரல் 5ஆம் தேதி வரை காங்கிரஸ் கட்சி தங்களின் வேட்பாளர்களை இறுதி காலம் அவகாசம் எடுத்துக் கொள்ளும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, காங்கிரஸ் கட்சியில் பணத்திற்காக எம்எல்ஏ சீட் கொடுப்பதாக விமர்சித்திருந்தார்.
இதனால் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற மையக் குழு கூட்டத்தில் அதிரி புதிரியானது. இதன்பின் ராகுல் காந்தி புதிய வேட்பாளர்கள் பட்டியலை உருவாக்க அறிவுறுத்தினார். அதேபோல் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக திமுகவை சாடி வந்தார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட திமுகவை விமர்சித்தது பேசுபொருளானது.
இந்த நிலையில் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் விலகி இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள மாணிக்கம் தாகூர், அதற்கான கடிதத்தை மல்லிகார்ஜுன கார்கேவிடம் கொடுத்திருக்கிறார். மாணிக்கம் தாகூரின் ராஜினாமாவிற்கு வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் குழப்பமும் காரணமாக சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரி செய்யும் பணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியொரு சூழலில் மாணிக்கம் தாகூர் பதவி விலகி இருப்பது விவாதமாகி இருக்கிறது. அதேபோல் மாணிக்கம் தாகூர் பதவி விலகலை திமுகவினர் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர்.
-
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட்











Click it and Unblock the Notifications