காங்கிரஸில் மீண்டும் வெடித்த கோஷ்டி பூசல்.. 300 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா.. பின்னணி என்ன?
சென்னை : தமிழக காங்கிரஸ் கமிட்டியில், மீண்டும் கோஷ்டி பூசல்கள் கடுமையாக எழுந்துள்ளன. தலைமையின் அறிவிப்புக்கு எதிராக 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர் ரஞ்சன் குமார் காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.சி பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சன் குமார் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் எஸ்.சி பிரிவு நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால் தமிழக காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ்.சி பிரிவு தலைவர்
தமிழக காங்கிரஸ் கட்சியில் எஸ்.சி பிரிவு தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ இருந்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்து வந்த செல்வப்பெருந்தகையின் பதவிக்காலம் முடிவடைந்து விட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.ஆழகிரியின் ஆதரவாளரான ரஞ்சன்குமார் தமிழக காங்கிரஸ் எஸ்.சி பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5ஆம் தேதி சோனியா காந்தி ரஞ்சன் குமாரை எஸ்.பி பிரிவு தலைவராக நியமித்தார்.

கூண்டோடு ராஜினாமா
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர் ரஞ்சன் குமார் தமிழக காங்கிரஸின் எஸ்.சி பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.சி பிரிவில் பொறுப்பில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

அனைத்து நிர்வாகிகளும்
தமிழ்நாடு காங்கிரஸில் மாநில எஸ்.சி பிரிவு தலைவர் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ் எஸ்.சி பிரிவின் துணைத் தலைவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட எஸ்.சி பிரிவு தலைவர்கள் என்று 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால் தமிழக காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சோனியாவுக்கு கடிதம்
இதுகுறித்து எஸ்.சி பிரிவு நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் எஸ்.சி பிரிவில் கடந்த எட்டு ஆண்டுகளாக உழைத்தவர்களை மாநில தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யாமல் தங்களை புறக்கணித்து விட்டதாகவும், இது நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும், இது இளம் தொண்டர்கள் கட்சியில் இருந்து விலகி மற்ற கட்சிகளில் சேர வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சனாதனம்
மேலும், "காங்கிரஸ் கட்சியில் எஸ்.சி பிரிவு வளர்வதற்கு இங்குள்ள சனாதனவாதிகள் விரும்பவில்லை. இவர்கள் பட்டியலின அணியை பொம்மை போல் பயன்படுத்த நினைக்கின்றனர். பட்டியலின பிரிவை நன்றாகச் செயல்பட விடாமல் தடுப்பதற்காகவே இப்படி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ரஞ்சன் குமார் நியமனத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்." என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications