விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்!
சென்னை: திமுக கூட்டணியில் தமிழக காங்கிரசுக்கு 28 சீட்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த 28 தொகுதிகள் என்னென்ன? என்பது இன்னும் முடிவாகவில்லை. இன்னும் ஓரிரு நாளில் இதற்கு தீர்வு காணப்படும் என்கிறார்கள்.
இந்த நிலையில், 28 சீட்டுக்களில், தற்போதைய சிட்டிங் தொகுதிகள் 17 இடங்களையும் அப்படியே கொத்தாக வாங்க வேண்டும் என காங்கிரசின் 17 எம்.எல்.ஏ.க்களும் செல்வப் பெருந்தகையிடம் வலிடயிறுத்தி வருகின்றனர்.

செல்வப் பெருந்தகையோ, "நிறைய தொகுதிகளை திமுக மாத்திக் கொடுக்கிறது. சிட்டிங் தொகுதிகள் முழுவதையும் திமுக கொடுக்காது" என்று சொல்லியிருக்கிறார்.
அதேசமயம், செல்வப் பெருந்தகைக்கு வலது கரமாக இயங்கும் ஒரு டீம், சிட்டிங் எம்.எல்.ஏ. க்கள் பலரிடமும், உங்க தொகுதியை திமுகவிடம் கேட்டு வாங்க வேண்டுமானால் கவனிக்க வேண்டியதிருக்கும்" என்று சொல்லி கோடிகளில் ஒரு தொகையை சொல்கின்றனர்.
அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள். இதற்கிடையே, 28 சீட்டுகளை காங்கிரஸ் கை வாசம் வைத்திருப்பதால் சிட்டிங் எம். எல். ஏ. க்கள் தவிர்த்து கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் பலரும் செல்வப் பெருந்தகையிடம் நட்பு பாராட்டி வருகின்றனர்.
அவர்களிடமும், செல்வப் பெருந்தகையின் டீம் பெரிய அளவில் டீல் பேசி வருகிறது. இதனால் காங்கிரசில் ஒரே கொந்தளிப்பாக இருக்கிறது. இந்த நிலையில், சீட்டுகள் பல கோடிகளுக்கு விலை பேசி விற்கப்படுவதாக கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் ராகுல்காந்திக்கு புகார்களை தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியாகும் போது, இந்த டீல் விவகாரம் பகிரங்கமாக வெடிக்கும் என்கிறார்கள் கதர்ச் சட்டையினர்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications