எதிர்காலத்தில் தமிழகத்தில் காங். 200 தொகுதிகளிலும் போட்டியிடலாம்: கே.எஸ். அழகிரி
சென்னை: எதிர்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளிலும் கூட போட்டியிடலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது
இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கையெழுத்திட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ். அழகிரி பேசியதாவது:
தி.மு.க.வுடனான தொகுதி உடன்பாடு மகிழ்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மதச்சார்பின்மை வெற்றிபெற வேண்டும் என்பதற்காக செயல்படுகிறோம். சமூகநீதிக்கு எதிரான சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நோயாக பாஜக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
"அதற்கெல்லாம் நேரமில்லை".. காங்.க்கு 25 தொகுதிகள் ஒதுக்கிய திமுக.. குமரி லோக்சபா சீட்டும் ஒதுக்கீடு!
பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் கட்சி மட்டும்தான். தமிழக சட்டசபை தேர்தலில் வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம். அதற்கான காலமும் வரும். இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறினார்.