தொடர் விடுமுறை எதிரொலி... மூன்று நாளில் ரூ 423 கோடிக்கு மது விற்பனை
சென்னை: நாளை மறுநாள் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மது கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலையில் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ. 215 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. தமிழகத்தில் வழக்கமாக ஒரு லட்சத்துக்கு மது விற்பனையாகும் கடைகளில் கூட ரூ. 3 லட்சத்துக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினரே அதிகம் மதுபானங்களை வாங்கிச் செல்வதாக தெரிகிறது. மயிலாப்பூரில் நேற்று நள்ளிரவு வரை மதுபானம் விற்ற டாஸ்மாக் கடைக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

டாஸ்மாக் கடைக்கு சீல்
வரும் 18 ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, சென்னை மயிலாப்பூரில் நேற்று நள்ளிரவு வரை மதுபானம் விற்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தியதில் மதுவிற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

அதிரடி சோதனை
மயிலாப்பூரில் உள்ள பல்லக்குமாநகரில் டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது போல், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காமல் ஓய்ந்துள்ளது. அதே போல், தேர்தலையும் அமைதியான நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

3 நாள் தொடர் விடுமுறை
தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த 3 நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைககளில் ரூ.423 கோடிக்கு மது விற்பனை நடத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பரப்புரை ஓய்ந்ததை அடுத்து, கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட வெளி ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

144 தடை உத்தரவு
அதே போல், மக்களவை தேர்தலையொட்டி புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் தேர்தல் நடத்தும் அதிகாரி அருண். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற இன்று மாலை 6 மணி முதல் ஏப்.19 காலை 9 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications