சென்னையில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் கொரோனா.. தமிழக அரசு கொடுத்த அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மெல்ல மெல்ல அதிகரித்து வருவது தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தினமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தில் மேலும் 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 27,42,826 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 679 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

இன்றைய கொரோனா பாதிப்பு
இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,02,947 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 597 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,41,610 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று மட்டும் 679 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,00,673 ஆக உயர்ந்துள்ளது.

10 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,735 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 6,629 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் பாதிப்பு
சென்னையில் இன்று 171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக கோவையில் 89 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 48 பேர், திருப்பூரில் 40 பேர், ஈரோட்டில் 45 பேர், சேலத்தில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் சென்னையில் பாதிப்பு 146 ஆகவும், நேற்று 165 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யட்டுள்ள நிலையில் இன்று பாதிப்பு 170ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications