சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 27,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,51,362 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று மிகப்பெரிய உச்சமாக ஒரே நாளில் 27,397 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,51,362 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 241 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,412 ஆக உயர்ந்துள்ளது.

கிராமப்புறங்களில் 4 மடங்கு அதிகரித்த உயிரிழப்புகள்.. கொரோனா 2ஆம் அலையால் பாதிப்பு அதிகம்..ஷாக் தகவல்கிராமப்புறங்களில் 4 மடங்கு அதிகரித்த உயிரிழப்புகள்.. கொரோனா 2ஆம் அலையால் பாதிப்பு அதிகம்..ஷாக் தகவல்

குணமடைந்தவர்கள்

குணமடைந்தவர்கள்

தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 23,110/ பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 11,96,549 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 1,39,401 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்,

செங்கல்பட்டில் 2458 பேர் பாதிப்பு

செங்கல்பட்டில் 2458 பேர் பாதிப்பு

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 6846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2458 பேரும், கோவையில் 2117 பேரும், திருவள்ளூரில் 1284 பேரும், மதுரையில் 1217 பேரும், காஞ்சிபுரத்தில் 906 பேரும், தூத்துக்குடியில் 853 பேரும், தஞ்சாவூரில் 857 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலத்தில் 550 பேர் பாதிப்பு

சேலத்தில் 550 பேர் பாதிப்பு

திருச்சியில் 820 பேரும், திருநெல்வேலியில் 674 பேரும், சேலத்தில் 550 பேரும், ஈரோட்டில் 779 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவள்ளூர் உள்பட 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 500 பேருக்கு மேல் ஏற்பட்டுள்ளது. எல்லா மாவட்டங்களிலும் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூரில் 17 பேர் மரணம்

திருவள்ளூரில் 17 பேர் மரணம்

கொரோனா தொற்றால் சென்னையில் ஒரே நாளில் 72 பேர் மரணம் அடைந்துள்ளனர், திருவள்ளூரில் 17 பேர், காஞ்சிபுரத்தில் 14 பேர், திருச்சியில் 12 பேர், திருப்பத்தூரில 11 பேர், சேலம் மற்றும் செங்கல்பட்டில் 10 பேர், மதுரை, தஞ்சாவூரில் தலா 7 பேரும், கடலூரில் 9 பேரும், வேலூர், விழுப்புரம், விருதுநகரில் தலா 5பேர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்துள்ளனர்.

English summary
Tamil Nadu : 27,397people have been affected by the corona infection today. As a result, the number of corona victims in Tamil Nadu has risen to 13,51,362.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X