கொரோனா தொற்று பரவல்: 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்தி வைப்பு: மத்திய அமைச்சர் தகவல்
2019 ஆம் திட்டமிடப்பட்ட 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பும், அது தொடர்பான கள நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மக்களவையில் கேள்வி
2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதா? அவ்வாறெனில் எப்போது நடக்கும் என்பது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் பதில் அளித்தார்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பை பாதித்த கொரோனா பேரிடர்
அவர் பதில் அளித்து பேசுகையில், " 2021ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுவது குறித்து கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இந்தியா முழுவதும் பரவிய கொரோனா பேரிடர் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பும் அது தொடர்பான கள நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

எவ்வாறு நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து 372 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது முறையான தகவலைப்பெற அந்தந்த மாநில மக்களின் தாய் மொழி தெரிந்தவர்கள், பிற இரு மொழிகள் தெரிந்தவர்களும் உடன் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவார்கள்" எனத் தெரிவித்தார்.
Recommended Video

மூன்றாவது அலைபரவல் வருமா?
மூன்றாவது அலை 2022 பிப்ரவரியில் தொடங்கும் என ஐஐடி ஆய்வு தகவல் வெளியான நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில்வரும் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி எந்த அளவுக்கு இருக்கும் என்பது போகபோகத்தெரியும். இந்நிலையில் பீஹாரில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படுவது குறித்து பீஹார் முதல்வர் 2 நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்திலும் அத்தகைய கோரிக்கைகள் அரசியல் கட்சிகளால் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications