தமிழகத்தில் 1,98,741 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை- 4,253 பேர் மருத்துவ கண்காணிப்பில்!
சென்னை: தமிழகத்தில் இதுவரை 1,98,741 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 4,253 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுநோய் படுதீவிரமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட இன்றைய நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் மொத்தம் 1,98,741 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இவர்களில் 4253 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமையண்று 320 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இன்று மேலும் 13 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக 303 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்துள்ளது.
#COVID19 TN Stat 20.3.20 :
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 20, 2020
Screened Passengers- 198741
Under Followup - 4253
Beds in Isolation Wards- 1120
Current Admissions- 32
Samples Tested - 333 (Negative-303, Positive -3(1 discharged), Under Process- 27)
#TN_Together_AgainstCorona #Vijayabaskar @MoHFW_INDIA
கொரோனா அச்சம் காரணமாக 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது 32 பேர் மருத்துவமனையில் இருக்கின்றனர். இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications