தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா - மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1629
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் புதியதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 15 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனைத் தொடர்ந்து கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 27 பேர் குணமடைந்தனர்.
மாவட்டங்களில்..
தமிழகத்தில் சென்னைதான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவையில் 134, திண்டுக்கல்லில் 77, ஈரோட்டில் 70, மதுரையில் 50, திருப்பூரில் 109 என பாதிக்கப்பட்டுள்ளனர்.