கோவையில் திடீர் உச்சம்.. தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் இன்று 5870 பேர் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 5870 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சராசரியாக தமிழகத்தில் தினமும் 5900 கொரோனா கேஸ்கள் வந்தவண்ணம் உள்ளது.
சென்னையிலும் 1000க்கும் அதிகமாக கொரோனா கேஸ்கள் வந்த நிலையில் தற்போது 1000க்கு குறைவாக கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் 1000க்கும் குறைவான கேஸ்கள் வர தொடங்கி உள்ளது.
கொரோனா.. இணை நோயாளிகளுக்கு.. பிளாஸ்மா சிகிச்சையால் பலன் இல்லை.. டாக்டர்கள் கருத்து
சென்னை எப்படி
965 பேர் இன்று சென்னையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,39,720ல் இருந்து 1,40,685 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12,003ல் இருந்து 11,412 ஆக உள்ளது.
எத்தனை மரணம்
தமிழகத்தில் இன்று 61 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 7748 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 3,98,366 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் இன்று 5859 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 51583 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள்.
கொரோனா சோதனை
தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது. 50,42,197 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர். இன்று 89793 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.
- 5212534 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் இன்று 79840 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
- மொத்தமாக 5042 197 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்து
இன்று செங்கல்பட்டில் 293 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 27947 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கடலூர் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 13669 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 545 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 18410 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.