கொரோனாவில் இருந்து எஸ்கேப்பாக வீட்டுக்கு வீடு குவார்ட்டர் சரக்கு கொடுங்களேன்.. மன்சூர் அலிகான்
சென்னை: கொரோனாவில் இருந்து தப்பிக்க வீடுதோறும் குவார்ட்டர் மதுபானம் வழங்க வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது:

கொரோனாவில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேவரக் கூடாது என்று பிரதமர் அறிவித்துள்ளார். இதனால் தினக் கூலி தொழிலாளர்கள், திரைத்துறை தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்.
தொட்டாலே தீட்டு என்பதை நியாயப்படுத்தும் வகையில் கொரோனா பீதியை கிளப்புகின்றனர். அப்படியானால் தொட்டு எண்ணக் கூடிய ரூபாய் நோட்டுகளை எரிப்பீர்களோ?

ஆரத்தழுவி வணங்குவதுதான் நமது பண்பாடு. இதற்கு எதிரானது தொட்டால் தீட்டு. இது யாருடைய பண்பாடு என்பதை புரிந்து கொள்ளுங்கள். முட்டையை சாப்பிட்டால் கொரோனா வராது. இதோ நான் பச்சை முட்டையை உடைத்து குடித்து காட்டியிருக்கிறேன். எனக்கு கொரோனா வராது.
வெளிநாட்டினர் மூலம்தான் கொரோனா பரவுகிறது எனில் தொடக்கத்திலேயே அவர்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? பேசாமல் கொரோனாவில் இருந்து தப்பிக்க வீட்டுக்கு வீடு குவார்ட்டர் மதுபானம் வழங்கலாம்.
நடிகர் விஜய்யை கழுத்தை பிடிக்காத குறையாக வருமான வரித்துறையினர் அழைத்து வந்தது தவறான முன்னுதாரணம். ஜனநாயகமற்ற செயலும் கூட. இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.












Click it and Unblock the Notifications