மகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா.. தென்மாநிலங்களிலும் அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னை: இந்தியாவில் மகாராஷ்டிராவிலும், கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15353 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் மொத்தம் 11,244,624 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 157,966 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். 10,897,486 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா.. ஒரே நாளில் உலகம் முழுக்க 283,860 பேர் பாதிப்பு.. அமெரிக்கா, பிரேசிலில் நிலைமை மோசம்!
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில்தான் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு இரண்டாம் அலைக்கான அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 22,28,471 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 20,77,112 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் இதுவரை 52500 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,55,677 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,39,138 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12251 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
கேரளா
கேரளாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,78,740 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,34,895 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 4113 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
கர்நாடகா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில்தான் தினமும் அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு மொத்தம் 9,55,451 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 9,35,772 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 12362 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 8,90,766பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,82,581பேர் குணமடைந்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 7176 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.