தமிழகத்தில் கொரோனா பலி 11 ஆக உயர்வு.. சென்னை புளியத்தோப்பைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயது பெண், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

Recommended Video

    பிரதமர் முடிவை ஏற்க தமிழக அமைச்சரவை முடிவு- தலைமை செயலாளர்

    தமிழகத்தில் நேற்று மற்றும் புதிதாக 58 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றால் 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மிக அதிகபட்சமாக சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவதாக கோவையில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Coronavirus death toll in Tamil Nadu rises to 11

    சென்னையில் மிக அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதிலும் புளியந்தோப்பு பகுயில் மட்டும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அந்த 10 பேர் வசிக்கும் தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் கொரோனா வைரஸ் பாதிப்புடன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+