SP balasubrahmanyam: பாலு...சீக்கிரமா எழுந்துவா..உனக்காக காத்திருக்கிறேன்: இசைஞானி இளையராஜா உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நலமுடன் மீண்டு வர வேண்டும் என்று இசைஞானி இளையராஜா உருக்கமாக வீடியோ பதிவு ஒன்றில் பிராத்தனையை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    பாலு சீக்கிரம் எழுந்து வா! இளையராஜா உருக்கம் • SPB in Hospital | Filmibeat Tamil

    வீடியோ பதிவில் இளையராஜா பேசியிருப்பதாவது:

    பாலு... சீக்கிரமா எழுந்துவா...

    உனக்காக காத்திருக்கிறேன்...

    நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவது அல்ல. சினிமாவோடு தொடங்கியதும் அல்ல.

    Coronavirus: Ilaiyaraaja prays for SP balasubrahmanyam

    எங்கயோ மேடைகச்சேரிகளில் நாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசைநிகழ்ச்சி அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது.

    அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்த நமத நட்பும் இசையும், இசை எப்படி சுரங்களைவிட்டு ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அதேபோல் உனது நட்பும் எனது நட்பும் நமது நட்பு எந்த காலத்திலும் பிரிந்தது இல்லை.

    சண்டை போட்டாலும் சரி.. நம் இருவருக்குள் சண்டை இருந்தாலும் அது நட்பே. சண்டை இல்லாமல் போனபோதும் அது நட்பே.

    எதனை நீயும் நன்றாக அறிவாய்..நானும் நன்றாக அறிவேன். அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன் நிச்சயமாக நீ திரும்பிவருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது.

    அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்....
    ..........................
    .............................

    பாலு... சீக்கிரம் வா.

    இவ்வாறு இளையராஜா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+