சென்னையில் டெஸ்ட் செய்த 8 பேரில் ஒருவருக்கு கொரோனா.. பிற மாவட்டங்கள் நிலைமை எப்படி? அதிரும் நிலவரம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 6,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
சென்னையை பொறுத்தளவில், மேலும் 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 92,206 லிருந்து 93,537 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையை பொறுத்தளவில், சுமார் 8 பேருக்கு ஒருவருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பதை பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகம்
தமிழகத்தில் இன்று மொத்தம் 61,729 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பிற மாநிலங்களை ஒப்பிட்டால், இது அதிகமாகும். தமிழகம் முழுக்க மொத்தம், 22,00,433 பேருக்கு இதுவரை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம், 115 பரிசோதனை மையங்கள் உள்ளன (58 அரசு+57 தனியார்). நெல்லையில் இன்று Liberty Diagnostic & Research Centre என்ற தனியார் ஆய்வகத்திற்கு பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை நிலவரம்
பொதுவாக, எந்த ஊரில் எத்தனை பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்பது குறித்து தனித்தனியாக தெரிவிப்பதில்லை. எப்போதாவது தெரிவிக்கப்படுகிறது. மொத்த பரிசோதனை எண்ணிக்கைதான் தினமும் வெளியாகும். இன்று சென்னையில் சுமார் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 1,329 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதன்படி, பரிசோதனை செய்யப்பட்டவர்களில் சுமார் 8 பேரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்டங்கள்
சென்னை -1329, செங்கல்பட்டு -449, காஞ்சிபுரம் -442, விருதுநகர் -376, திருவள்ளூர் -385, தூத்துக்குடி - 317, மதுரை - 301, கோவை - 270, குமரி -269, தேனி - 235,
ராணிப்பேட்டை - 244, வேலூர் -212, நெல்லை-212, திருச்சி - 199, தஞ்சை-162, விழுப்புரம் -157 பாதிப்பு பதிவாகியுள்ளது.
Recommended Video

குணமடைந்தோர்
திருவண்ணாமலை - 152, சேலம்-112, புதுக்கோட்டை-110, கள்ளக்குறிச்சி-104, திருவாரூர்-100, திண்டுக்கல்- 100, தென்காசி-99, கடலூர்-89,
ராமநாதபுரம்-86, திருப்பத்தூர்-86, சிவகங்கை-84, நாமக்கல் -51, திருப்பூர்-51, நீலகிரி -40, கிருஷ்ணகிரி-31, தர்மபுரி - 30, கரூர்-27, பெரம்பலூர் - 25,
ஈரோடு -22, நாகை-10, அரியலூர்-4 என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தை கடந்துள்ளது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications