இதை கொண்டாட கூடாது.. இதுதான் பெரிய போராட்டத்திற்கான தொடக்கம்.. ஊரடங்கு குறித்து மோடி டிவிட்!
மக்கள் ஊரடங்கு இன்று இரவு 9 மணியோடு நிறைவு பெறும், ஆனால் இதை நாம் கொண்டாடி முடிக்க கூடாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: மக்கள் ஊரடங்கு இன்று இரவு 9 மணியோடு நிறைவு பெறும், ஆனால் இதை நாம் கொண்டாடி முடிக்க கூடாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
இன்று நாடு முழுக்க கொரோனா வைரசுக்கு எதிராக ஜனதா ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் கோரிக்கையை அடுத்த இந்த ஊரடங்கு பின்பற்றப்பட்டது.

மக்கள் தாமாக முன் வந்து ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்து இருந்தார். அதை ஏற்று இன்று நாடு முழுக்க ஊரடங்கு பின்பற்றப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து மக்கள் எல்லோரும் வீட்டிற்குள் இருந்தனர். அதோடு இன்று மாலை மணிக்கு தங்கள் கதவு அருகே, அல்லது பால்கனி அருகே வந்து கை தட்டினார்கள் . நாடு முழுக்க சைரன் ஓலித்தனர். கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இப்படி செய்தார்கள். இதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.
இது குறித்து இன்று பிரதமர் மோடி தனது டிவிட்டில், மக்கள் ஊரடங்கு இன்று இரவு 9 மணியோடு நிறைவு பெறும். ஆனால் இதை நாம் கொண்டாடி முடிக்க கூடாது. நாம் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்.
இதை ஒரு வெற்றி என்று யாரும் கருத கூடாது. நம்முடைய மிகப்பெரிய போராட்டத்திற்கு இது ஒரு தொடக்கம்தான். இந்திய மக்கள் எந்த அளவிற்கு திறன் கொண்டவர்கள் என்று இன்றி நிரூபித்துள்ளோம்.
இந்திய மக்கள் நினைத்தால் எவ்வளவு பெரிய துயரத்தையும் இடைஞ்சலையும் கடக்க முடியும் என்று பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார். பிரதமர் மோடி தனது டிவிட்டில் நம்முடைய மிகப்பெரிய போராட்டத்திற்கு இது ஒரு தொடக்கம்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications