ஷாக் தந்த சென்னை.. தமிழகத்தில் மோசமாகும் நிலை.. இன்று 3645 கொரோனா கேஸ்கள்.. பாதிப்பு 74622 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 3,645 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் தமிழகத்தில் கொரோனா பரவி வருகிறது.
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 74622 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட பின்பும் கூட கேஸ்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னை நிலை
சென்னையில் எப்போதும் இல்லாத அளவிற்கு இன்று கொரோனா கேஸ்கள் வைத்துள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சமாக 1956 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 49960 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது.

வேறு எங்கு
செங்கல்பட்டில் இன்று 232 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 4651 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரையில் இன்று 190 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 1477 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் இன்று 177 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 3277 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. வேலூரில் இன்று 148பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 907 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ் கணக்கு
தமிழகத்தில் இன்று 1358 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 41357 பேர் இதுவரை தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 32305 ஆக்டிவ் நோயாளிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் இன்று கொரோனா காரணமாக 46 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது.

சோதனை எத்தனை
33675 மாதிரிகள் இன்று தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 32317 பேருக்கு இன்று தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. 1042649 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.992991 பேருக்கு இதுவரை தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications