இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15981 பேருக்கு கொரோனா.. 146 பேர் பலி.. 19,785 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15981 பேருக்கு கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.
பண்டிகை நாட்கள் காரணமாக நாடு முழுக்க மக்கள் வெளியே செல்வதும், சுற்றுலாத்தலங்களுக்கு செல்வதும் அதிகரித்து உள்ளது. இதனால் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பண்டிகை நாட்களில் பரவிய கொரோனா கேஸ்கள் இன்னும் 2 வாரத்திற்குள் எதிரொலிக்கும், 2 வாரத்திற்கு பின் கேஸ்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தியாவில் மூன்றாம் அலை அக்டோபர் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இருப்பினும் கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் தினசரி கேஸ்கள் குறைந்து கொண்டே வருகின்றன.

இந்தியா
கடந்த இரண்டு நாட்களாக 16 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் பதிவான நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15981 பேருக்கு கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. 3,40,66,760 பேருக்கு இதுவரை இந்தியாவில் கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 1,89,342 பேர் இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 4,52,156 பேர் இதுவரை கொரோனா காரணமாக இந்தியாவில் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
அதே சமயம் மகாஷ்டிராவில் இரண்டு நாட்களாக 2200க்கும் அதிகமாக பதிவாகி வந்த கொரோனா கேஸ்கள் திடீரென குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,89,982 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 29,627 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இதுவரை 1,39,760 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக 64,16,998 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். மேலும் புதிதாக 26 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களுக்கு இடையிலும், தளர்வுகள் கொண்டு வரப்பட்ட பின்பும் கூட கொரோனா கேஸ்கள் அதிகரிக்கவில்லை. தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,85,874 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழ்நாட்டில் புதிதாக 1,233 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 35,884 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,34,968 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 15,022 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் தமிழ்நாட்டில் 15 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,83,133பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 264 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 37,937 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,35,659 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 9,508 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் கர்நாடகாவில் 6 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் இன்னும் முழுமையாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 7955 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா காரணமாக 48,46,766 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 90,949 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இதுவரை 26,791 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 47,28,497 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். புதிதாக 57 பேர் பலியாகி உள்ளனர்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications