சென்னை, கோவை, செங்கல்பட்டில் தீயாய் பரவும் கொரோனா - கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது, சென்னையில் ஒரே நாளில் 2015 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவை, செங்கல்பட்டிலும் கொரோனா தீயாக பரவி வருகிறது.
சென்னை: மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரம் பேரை நெருங்கியுள்ள நிலையில் சென்னையில் ஒரே நாளில் 2015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 611 பேரும் கோவையில் 604 பேரும் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு, ஏப்ரல் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை:
- அரியலூர் - 22
- செங்கல்பட்டு - 611
- சென்னை - 2105
- கோவை - 604
- கடலூர் - 157
- தர்மபுரி - 98
- திண்டுக்கல் - 78
- ஈரோடு - 117
- கள்ளக்குறிச்சி - 35
- காஞ்சிபுரம் - 277
- கன்னியாகுமரி - 56
- கரூர் - 44
- கிருஷ்ணகிரி - 119
- மதுரை - 219
- நாகை -125
- நாமக்கல் - 72
- நீலகிரி - 29
- பெரம்பலூர் - 4
- புதுக்கோட்டை - 45
- ராமநாதபுரம் - 17
- ராணிப்பேட்டை - 73
- சேலம் - 158
- சிவகங்கை - 72
- தென்காசி - 74
- தஞ்சாவூர் - 127
- தேனி - 30
- திருப்பத்தூர் - 30
- திருவள்ளூர் - 333
- திருவண்ணாமலை - 111
- திருவாரூர் - 98
- தூத்துக்குடி - 138
- திருநெல்வேலி - 81
- திருப்பூர் - 160
- திருச்சி - 184
- வேலூர் - 73
- விழுப்புரம் - 61
- விருதுநகர் - 71
இன்று மொத்தம் 6711 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது மாநிலம் முழுவதும் 46308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ள மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.