வேளச்சேரி தொகுதி மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா!
சென்னை: வேளச்சேரி தொகுதி மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக போட்டியிட இருப்பவர் சந்தோஷ் பாபு.
இவர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். சந்தோஷ் பாபுவுக்கு முதலில் வில்லிவாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டது. பின்னர் அவர் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட மாற்றப்பட்டார்.இதற்கிடையே தேர்தலில் போட்டியிட சந்தோஷ் பாபு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் சந்தோஷ் பாபுக்கு இன்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை சந்தோஷ் பாபு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை வேளச்சேரி தொகுதி மக்களிடம் தெரிவித்து கொள்கிறேன். நான் எவ்வளவு துரதிர்ஷ்டவசமானவன்.
உங்கள் அனைவரையும் சந்தித்து உங்கள் ஆசீர்வாதங்களையும் வாக்குகளையும் பெற விரும்புகிறேன். நாம் டிஜிட்டல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். எங்களது கட்சியினர் உங்களை வந்து சந்திப்பார்கள். எனக்கும், மக்கள் நீதி மய்யத்துக்கும் வாக்களியுங்கள் என்று சந்தோஷ் பாபு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications