சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர் நியூஸ்.. தமிழ்நாட்டில் அப்படியே சரியும் கொரோனா கேஸ்கள்.. உயிரிழப்பும் குறைவு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கோவை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

அதிகரிக்கும் பாதிப்பு.. அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று அதிகரிக்கும் பாதிப்பு.. அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

சரியும் கொரோனா

சரியும் கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு 1,500-க்குள் குறைந்த கொரோனா தற்போது 1,400-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும். இதனால் மொத்த பாதிப்பு 26,75,592 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பும் குறைவு

உயிரிழப்பும் குறைவு

கொரோனாவுக்கு உயிரிழப்பு தொடர்ந்து அதிகமாக இருந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது., கொரோனாவுக்கு மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இது நேற்றைய உயிரிழப்பை விட குறைவாகும், சென்னையில் அதிகபட்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் இறந்துள்ளனர். தர்மபுரியில் 3 பேர் இறந்தனர், தஞ்சாவூரில் 2 பேரும், திருவாரூரில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு பேர் 35,754 உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,473 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,23,459 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

16,379 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,42,864 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,72,67,136 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 169 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொடர்ந்து 200-க்கு கீழே குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

3 மாவட்டங்களில் சதம்

3 மாவட்டங்களில் சதம்

கோவையில் 140 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் தொடர்ந்து கொரோனா வேகமாக குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. செங்கல்பட்டில் 103 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 29 பேருக்கும், மதுரையில் 21 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 27 பேருக்கும், திருவள்ளூரில் 58 பேருக்கும், திருச்சியில் 52 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 72 பேருக்கும், விருதுநகரில் 9 பேருக்கும், ஈரோட்டில் 82 பேருக்கும், சேலத்தில் 45 பேருக்கும், நாமக்கல்லில் 59 பேருக்கும், தஞ்சாவூரில் 73 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.

English summary
Corona infection continues to decline in Tamil Nadu. The capital Chennai continues to top the daily list. Corona infection is declining in many districts, including Coimbatore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X