சென்னையில் ஆக்ஸ்போர்டு தயாரிப்பு... கோவிஷீல்ட் தடுப்பூசி... மனித பரிசோதனை துவக்கம்!!
சென்னை:சென்னையில் ஆக்ஸ்போர்டு தயாரித்து இருக்கும் கொரோனா தடுப்பு ஊசியான கோவிஷீல்ட் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் இன்று தொடங்கியுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், ஆஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பு மருந்தை தயாரிக்கவும், இரண்டாம், மூன்றாம் கட்ட மனித பரிசோதனை நடத்துவதற்கும் புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா அனுமதி வழங்கியுள்ளன.

இந்த மருந்து தயாரிப்பு பணியில் ஏற்கனவே சீரம் இன்ஸ்டிடியூட் ஈடுபட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் முதல் இரண்டு கட்ட மனித பரிசோதனைகள் பிரிட்டனில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனையில் பெண் ஒருவருக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டதால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் பரிசோதனை துவங்கி உலகளவில் நடந்து வருகிறது.
சென்னையிலும் இன்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. இந்தப் பரிசோதனையில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 16 இடங்களில் இந்த தடுப்பூசி பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி, ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு தேதிகளில் நடந்து வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications