”தனியார்போல் செயல்படும் அரசு உதவிபெறும் கல்லூரி” - கையகப்படுத்த அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
சென்னை: துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரியில் அதீத கட்டண வசூல் முறைகேடு நடைபெறுவதாகவும் தனி அலுவலர் அமைத்து இக்கல்லூரியை அரசு கையகப்படுத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "சுயநிதிப் பாடப்பிரிவின் மூலம் லாபம் பெற ஆரம்பித்த டி.பி.ஜெயின் கல்லூரி நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பாடப்பிரிவையும் சுயநிதிப் பாடப்பிரிவாக மாற்றி அதீத கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த நான்காண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு உயர்த்தி சுயநிதிப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு இணையான கட்டணத்தை வசூலித்து வருகிறது.

பேராசிரியர்கள் பணி நீக்கம்
2020-21ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் பிரிவில் பணி நிறைவு பெறும் பேராசிரியர்களின் இடத்தில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதை நிறுத்தியுள்ளது. இதுபோன்ற அரசின் விதிமுறைகளுக்கு புறம்பான கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்த 11 பேராசிரியர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்துள்ளது.

அரசு உதவிபெறும் கல்லூரி
அரசின் அனைத்து உதவிகளையும் பெற்று கல்வி நிறுவனத்தை தொடங்கி உள் கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக் கொண்டு அதை அப்படியே சுயநிதி கல்லூரியாகவே மாற்றி செயல்படுத்தி வருகிறது. அதீத கட்டண கொள்ளை வசூலில் ஈடுபடுவதால் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் அப்பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் சேரமுடியாமல் உயர்கல்வி பயில முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு கையகப்படுத்த வேண்டும்
எனவே, தாங்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் டி.பி. ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1976 பிரிவு 14 (அ)வை பயன்படுத்தி ஒரு தனி அலுவலரை நியமித்து அரசின் கட்டுப்பாட்டில் கையகப்படுத்தி தமிழக அரசே இக்கல்லூரியை ஏற்று நடத்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மேலும் இதுபோன்று தமிழகம் முழுவதும் இயங்கும் 250 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் அரசின் விதிகளுக்குட்பட்டு செயல்படுகின்றனவா, அரசு நிர்ணயித்த கட்டணங்கள் தான் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கும் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்." என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications