”தனியார்போல் செயல்படும் அரசு உதவிபெறும் கல்லூரி” - கையகப்படுத்த அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
சென்னை: துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரியில் அதீத கட்டண வசூல் முறைகேடு நடைபெறுவதாகவும் தனி அலுவலர் அமைத்து இக்கல்லூரியை அரசு கையகப்படுத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "சுயநிதிப் பாடப்பிரிவின் மூலம் லாபம் பெற ஆரம்பித்த டி.பி.ஜெயின் கல்லூரி நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பாடப்பிரிவையும் சுயநிதிப் பாடப்பிரிவாக மாற்றி அதீத கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த நான்காண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு உயர்த்தி சுயநிதிப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு இணையான கட்டணத்தை வசூலித்து வருகிறது.

பேராசிரியர்கள் பணி நீக்கம்
2020-21ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் பிரிவில் பணி நிறைவு பெறும் பேராசிரியர்களின் இடத்தில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதை நிறுத்தியுள்ளது. இதுபோன்ற அரசின் விதிமுறைகளுக்கு புறம்பான கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்த 11 பேராசிரியர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்துள்ளது.

அரசு உதவிபெறும் கல்லூரி
அரசின் அனைத்து உதவிகளையும் பெற்று கல்வி நிறுவனத்தை தொடங்கி உள் கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக் கொண்டு அதை அப்படியே சுயநிதி கல்லூரியாகவே மாற்றி செயல்படுத்தி வருகிறது. அதீத கட்டண கொள்ளை வசூலில் ஈடுபடுவதால் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் அப்பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் சேரமுடியாமல் உயர்கல்வி பயில முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு கையகப்படுத்த வேண்டும்
எனவே, தாங்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் டி.பி. ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1976 பிரிவு 14 (அ)வை பயன்படுத்தி ஒரு தனி அலுவலரை நியமித்து அரசின் கட்டுப்பாட்டில் கையகப்படுத்தி தமிழக அரசே இக்கல்லூரியை ஏற்று நடத்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மேலும் இதுபோன்று தமிழகம் முழுவதும் இயங்கும் 250 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் அரசின் விதிகளுக்குட்பட்டு செயல்படுகின்றனவா, அரசு நிர்ணயித்த கட்டணங்கள் தான் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கும் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்." என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications