உறவினர்கள் அழுதால் பணம் அனுப்பாதீர்.. ஏஐ குளோனிங் வாய்ஸ் மோசடி குறித்து சைபர் கிரைம் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உறவினர்கள் போல் ஏஐ குளோனிங் குரலில் பேசி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அன்றெல்லாம் பணத்தை அடித்து புடுங்கிக் கொண்டு சென்றனர். மேலும் வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின. இவை தற்போதும் நடந்து வருகிறது.

Cyber crime warns about AI cloning voice scam

ஆனால் ஹைடெக்காக நடந்து வருகிறது. அதாவது ஒரு செல்போனில் பேசியபடியே பணத்தை அபேஸ் செய்யும் ஆசாமிகள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். வெளிமாநிலத்தில் இருந்து பேசும் நபர்கள், ரேண்டமாக ஒரு நம்பருக்கு போன் செய்வர்.

அவர்களிடம் தாங்கள் இந்த வங்கியில் இருந்து பேசுவதாகவும் தங்களுடைய ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டுவிட்டதாகவும் அந்த எண்ணை கூறினால் உடனே ரிலீஸ் செய்வதாகவும் இல்லாவிட்டாலும் தங்களால் பணமே எடுக்க முடியாது என்றும் கதை அளப்பர். இதை நம்பாமல் ஆவது ஆகட்டும் என சொல்வோர் நிறைய பேர் உண்டு.

ஆனால் அப்பாவிகள் சிலர் ஏடிஎம்மில் உள்ள எண்ணை கூறி பணத்தை இழந்திருக்கவும் செய்துள்ளார்கள். இதுகுறித்து புகார் அளித்தாலும் பணம் திரும்பி கிடைப்பது சந்தேதகம்தான். அது போல் "நீங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை. தற்போது நாங்கள் சொல்லும் எண்ணுக்கு பணம் செலுத்துங்கள். இல்லாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என அச்சுறுத்துவார்கள்.

ஆனால் அந்த வாடிக்கையாளர்கள் "பணம் செலுத்தியாகிவிட்டது" என சொன்னாலும் "இன்னும் எங்களுக்கு வரவில்லை. அது உங்கள் கணக்கில் ஏற இரு நாட்கள் ஆகும். இப்போது பணத்தை செலுத்துங்கள், ஒரு வேளை நீங்கள் ஏற்கெனவே கட்டியிருப்பது எங்கள் அக்கவுண்டுக்கு வந்ததும் நீங்கள் செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்கிறோம்" என்பார்கள்.

இதனால் கரண்ட் கட்டாகிவிடுமோ என எண்ணி பணத்தை பலர் செலுத்தி ஏமாந்துள்ளனர். இது குறித்து தமிழக காவல் துறை அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தற்போது டெக்னாலஜி வளர வளர, மோசடிகளும் ஹைடெக்காக இருக்கிறது. ஏஐ வந்தாலும் வந்தது, இதை கெட்டதற்காகவே நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள்.

இந்த ஏஐ குளோனிங் டெக்னாலஜியில் உறவினர்கள் பேசுவது போல் பேசி பண மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது நம் நெருங்கிய உறவினர் பேசுவது போலவே அந்த குரல் இருக்கும். அவர்கள் அழுதுக் கொண்டே எதற்காகவாவது பணத்தை உடனே அனுப்பு என்பார்கள். நாமும் அவசரம் ஆச்சே என்று நினைத்த உடனே பணத்தை அனுப்பினால் அது மோசடி நபருக்கு சென்றுவிடும்.

பிறகு உறவினரிடம் விசாரித்தால்தான் தெரியும். அவர்கள் போன் செய்தார்களா இல்லையா என்று! இதனால் எதையும் நேரில் போய் பார்க்காமல் வெறும் குரலை மட்டுமே நம்பி பணத்தை செலுத்தாதீர்கள் என சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+