Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வர்தா புயல் அளவுக்கு சென்னையில் பாதிப்பை ஏற்படுத்துமா கஜா? எத்தனை கி.மீ வேகத்தில் காற்று வீசும்?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தீவிரமடையும் கஜா புயல்.. அதிகாரிகளுடன் தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை

    சென்னை: கஜா புயல் காரணமாக நவம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில், சென்னை உட்பட தமிழகத்தின் வட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் வர்தா புயல் அளவுக்கு இதன் தாக்கம் இருக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக மாறி, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. கஜா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் வரும் 15ம் தேதி நாகை மற்றும் சென்னை நடுவே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2016ம் ஆண்டு டிசம்பர் மாதம், வர்தா புயல் சென்னையில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 130 கி.மீ வேகத்தில் புயல் வீசியது. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர். சென்னையில் கன மழை பெய்தது.

    சென்னையில் பாதிப்பு

    சென்னையில் பாதிப்பு

    மின்சாரம் இல்லாமல் சென்னை நகரம் இருளில் மூழ்கியது. பலத்த காற்று மற்றும் மழையால், 3 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், புயல் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டார் என்ற பாராட்டையும் பெற்றார். இருப்பினும் புயலின் வீரியம் அதிகமாக இருந்ததால், பாதிப்பை தவிர்க்க முடியவில்லை.

    வர்தா அளவுக்கு இருக்காது

    வர்தா அளவுக்கு இருக்காது

    வர்தா புயல் அளவுக்கு கஜா புயல் தீவிரமாக இருக்காது என்று வானிலை அதிகாரிகள் கூறுகிறார்கள். வர்தா புயலின்போது மணிக்கு 130 கி.மீ வேகத்தில் சென்னையில் காற்று வீசியது. ஆனால், கஜா புயல் அந்த அளவுக்கு வேகமாக இருக்காது. மணிக்கு 80 கி.மீ முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மக்களுக்கு எச்சரிக்கை

    மக்களுக்கு எச்சரிக்கை

    வர்தா புயல் அளவுக்கு இது தீவிரம் இல்லை என்றபோதிலும், 80 கி.மீ வேகத்திற்கு மேல் காற்று வீசும் என்பது உறுதி என்பதால், மக்கள் வரும் 15ம் தேதி வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று வானிலை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    புயல் இருக்கும் இடம்

    புயல் இருக்கும் இடம்

    இன்று காலை, 5.30 மணி அளவில், சென்னையில் இருந்து வடகிழக்கே, 740 கிலோ மீட்டர் தொலைவில், புயல் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் மணிக்கு 6 கி.மீ வேகத்தில் நாகை-சென்னை நடுவேயான பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. வரும் 15ம் தேதி கஜா புயல், கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+