வர்தா புயல் அளவுக்கு சென்னையில் பாதிப்பை ஏற்படுத்துமா கஜா? எத்தனை கி.மீ வேகத்தில் காற்று வீசும்?
Recommended Video

சென்னை: கஜா புயல் காரணமாக நவம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில், சென்னை உட்பட தமிழகத்தின் வட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் வர்தா புயல் அளவுக்கு இதன் தாக்கம் இருக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக மாறி, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. கஜா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் வரும் 15ம் தேதி நாகை மற்றும் சென்னை நடுவே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2016ம் ஆண்டு டிசம்பர் மாதம், வர்தா புயல் சென்னையில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 130 கி.மீ வேகத்தில் புயல் வீசியது. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர். சென்னையில் கன மழை பெய்தது.

சென்னையில் பாதிப்பு
மின்சாரம் இல்லாமல் சென்னை நகரம் இருளில் மூழ்கியது. பலத்த காற்று மற்றும் மழையால், 3 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், புயல் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டார் என்ற பாராட்டையும் பெற்றார். இருப்பினும் புயலின் வீரியம் அதிகமாக இருந்ததால், பாதிப்பை தவிர்க்க முடியவில்லை.

வர்தா அளவுக்கு இருக்காது
வர்தா புயல் அளவுக்கு கஜா புயல் தீவிரமாக இருக்காது என்று வானிலை அதிகாரிகள் கூறுகிறார்கள். வர்தா புயலின்போது மணிக்கு 130 கி.மீ வேகத்தில் சென்னையில் காற்று வீசியது. ஆனால், கஜா புயல் அந்த அளவுக்கு வேகமாக இருக்காது. மணிக்கு 80 கி.மீ முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை
வர்தா புயல் அளவுக்கு இது தீவிரம் இல்லை என்றபோதிலும், 80 கி.மீ வேகத்திற்கு மேல் காற்று வீசும் என்பது உறுதி என்பதால், மக்கள் வரும் 15ம் தேதி வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று வானிலை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புயல் இருக்கும் இடம்
இன்று காலை, 5.30 மணி அளவில், சென்னையில் இருந்து வடகிழக்கே, 740 கிலோ மீட்டர் தொலைவில், புயல் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் மணிக்கு 6 கி.மீ வேகத்தில் நாகை-சென்னை நடுவேயான பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. வரும் 15ம் தேதி கஜா புயல், கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications