இன்று மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்.. டிசம்பர் 9ஆம் தேதி அதீத கனமழை.. ரெட் அலர்ட்!
சென்னை: வங்கக் கடலில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தமானது மாண்டஸ் புயலாக இன்று மாலை உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் கடந்த 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்து பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாலை வலுப்பெற்றது.
இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக இன்று உருவாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரைத்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல்
இது தென்மேற்கு வங்கக் கடலை நாளை வந்தடையும் என்றும் மேற்கு வடமேற்கில் நகர்ந்து தமிழகம், புதுவை மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை அடுத்த 48 மணி நேரத்தில் வந்தடையும் என வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகம், புதுவையில் இன்று மிதமான மழை பெய்யும். இன்று நள்ளிரவு முதல் மழை அதிகரிக்கும்.

எத்தனை மாவட்டங்கள்
சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ரெட் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 8 மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் நாளை மறுநாள் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்னை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.

புயல் கூண்டு எச்சரிக்கை
அது போல் இந்த புயல் புதுவை அருகே கரையை கடக்கும் என்பதால் புதுவைக்கு இரு பேரிடர் மீட்புகுழுவினரும் காரைக்காலுக்கு ஒரு குழுவும் சென்றுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரனுடன் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்றைய தினம் ஆலோசனை நடத்தியிருந்தார். வெள்ள அபாயம் உள்ள கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் மக்கள் தயாராக இருக்கவும் அதே நேரம் அச்சப்பட தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அது போல் புதுவை, காரைக்காலிலும் 1ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications