6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்
சென்னை: வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிவர் புயல் அடுத்த 12 மணிநேரத்தில் மேலும் தீவிர புயலாக வலுவடைந்து இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயலானது நேற்று 5 கி.மீ வேகத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கியது. ஆனால் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் 3 மணிநேரமாக ஒரே இடத்திலேயே நிவர் புயல் மையம் கொண்டிருந்தது.
பின்னர் மணிக்கு 5 கி.மீ.வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்தது நிவர் புயல். இதனால் இன்று மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட புயல் இன்று இரவுதான் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நிவர் புயல் நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

6 மணிநேரமாக 6 கி.மீ வேகம்
வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகருகிறது. கடலூருக்கு கிழக்கு- தென்கிழக்கில் 300 கி.மீ. தொலைவில் இது நகர்ந்து வருகிறது.

எந்த இடத்தில் நிவர்?
புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்க்கில் 310 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில் 370 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது நிவர் புயல். அடுத்த 12 மணிநேரத்தில் மேலும் தீவிர புயலாக நிவர் புயல் வலுவடையும்.

இன்று இரவு கரையை கடக்கும்
அடுத்த 6 மணி நேரத்துக்கு மேற்கு- தென்மேற்கு திசையிலும் பின்னர் வடமேற்கு திசையை நோக்கியும் நிவர் புயல் நகரும். பின்னர் இன்று (நவ.25) இரவு தமிழகம்- புதுவை கடலோரத்தில் அதாவது காரைக்கால்- மாமல்லபுரம் இடையே நிவர் புயல் கரையை கடக்கும்.

உக்கிரமான புயல் காற்று
நிவர் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120, 130 கி.மீ முதல் 145 கி.மீ. வரையில் புயல் காற்று வீசக் கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications